டி20 உலகக்கோப்பை: இந்திய அணியுடன் இணைந்த துணை கேப்டன்

நியூயார்க்,

20 அணிகள் கலந்து கொள்ள உள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 1ம் தேதி (இந்திய நேரப்படி 2ம் தேதி) தொடங்குகிறது. இந்த தொடர் இம்முறை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை முன்னிட்டு தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்த தொடருக்காக அமெரிக்கா சென்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க்கில் தங்களது தீவிர பயிற்சியை தொடங்கினர். இது தொடர்பான வீடியோவை பி.சி.சி.ஐ தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இதனிடையே இந்திய அணியின் துணை கேப்டனான ஹர்திக் பாண்ட்யா, அமெரிக்கா சென்ற வீரர்களுடன் பயணிக்கவில்லை. இது தொடர்பாக பல வதந்திகள் பரவின.

இந்நிலையில் தற்போது ஹர்திக் பாண்ட்யா, தனது எக்ஸ் பக்கத்தில், ” தேசிய கடமையில்” எனும் தலைப்பில் இந்திய அணியுடன் இணைந்து பயிற்சி செய்யும் புகைப்படத்தை பதிவிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.