புது மனைவியுடன் சண்டை; அதிகாலையில் பெற்றோர், சகோதரர்கள் என 8 பேரை கோடரியால் வெட்டிக் கொன்ற வாலிபர்!

மத்தியப் பிரதேச மாநிலம், சிந்த்வாராவில் உள்ள போதல் கச்சார் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சுக்ராம். இவருக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்தது. சற்று மனநிலை பாதிக்கப்பட்ட சுக்ராம், அடிக்கடி தனது மனைவியோடு சண்டை போட்டுக்கொண்டிருந்தார். இன்று அதிகாலையில் கணவன், மனைவி இடையே மீண்டும் சண்டை ஏற்பட்டது. இந்தச் சண்டை முற்றிய நிலையில் சுக்ராம் வீட்டில் கிடந்த கோடரியை எடுத்து தனது மனைவியை வெட்டிக் கொலைசெய்தார். பின்னர் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த தனது பெற்றோர், சகோதரர்கள், குழந்தைகள் என 8 பேரை கோடரியால் வெட்டிக் கொலைசெய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்டார். இதில் ஒரு சிறுமி மட்டும் உயிர் தப்பி வெளியில் சென்று நடந்ததை தெரிவித்தார்.

க்ரைம்

கிராம மக்கள் இது குறித்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸ் அதிகாரி மணீஷ் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டார். ஒட்டுமொத்த கிராமமும் சீல் வைக்கப்பட்டது. கொலைசெய்ய பயன்படுத்தப்பட்ட கோடரி சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. கொலைசெய்தவர் ஏதாவது போதைப்பொருளுக்கு அடிமையாக இருந்தாரா என்பது விசாரிக்கப்பட்டு வருகிறது என்று மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் மணீஷ் தெரிவித்தார். கொலைக்கான உண்மையான காரணம் இன்னும் தெரியவரவில்லை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். வீடு முழுவதும் உடல்கள் சிதறிக்கிடந்தது. போலீஸார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் ஒட்டுமொத்த கிராமமும் அதிர்ச்சியில் மூழ்கி இருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.