பீகாரில் பயங்கரம்: கடுமையான வெயிலால் சுருண்டு விழுந்து 19 பேர் சாவு – 40 பேர் மருத்துவமனையில் அனுமதி!

பாட்னா: பீகார் மாநிலத்தில் நிலவி வரும் கடுமையான வெப்பம் மற்றும் வெப்ப அலையின் தாக்கம் காரணமாக, இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 40 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் மாநில அரசு தகவல் வெளியிட்டு உள்ளது. நாடு முழுவதும் இந்த ஆண்டு வரலாறு காணாத அளவில் வெப்பம் நிலவி வருகிறது. தொடர்ந்து வெப்பக்காற்றும் வீசுவதால், பொதுமக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். இந்தியாவின் மேற்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் வெப்ப அலை வீசி வருகிறது. இதன் காரணமாக மக்கள் … Read more

\"போர் நிறுத்தம்..\" திடீரென அறிவித்த ஹமாஸ்.. இஸ்ரேல் நிலைப்பாடு தான் என்ன? உற்று நோக்கும் உலக நாடுகள்

பாலஸ்தீனம்: காசாவில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இந்த போரை இஸ்ரேல் நிறுத்தினால் பணயக் கைதிகளை விடுவிப்பது முதல் முழுமையான போர் நிறுத்த உடன்பாட்டிற்குத் தயாராக உள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது. இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே பல மாதங்களாகப் போர் நடந்து வருவது அனைவருக்கும் தெரியும். கடந்த அக். மாதம் இஸ்ரேலில் நுழைந்து ஹமாஸ் தாக்குதல் Source Link

Garudan Review: கருடன் விமர்சனம்.. சொல்லி அடித்த சூரி.. சசிகுமார், உன்னி முகுந்தன் நடிப்பு எப்படி?

நடிகர்கள்: சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன்இசை: யுவன் சங்கர் ராஜா நேரம்: 2 மணி நேரம் 14 நிமிடங்கள் இயக்கம்: துரை செந்தில்குமார் சென்னை: நகைச்சுவை நடிகராக தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக நடித்து வரும் சூரி கடந்த ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் முதன்முறையாக ஹீரோவாக நடித்தார். தனது முதல் படத்திலேயே நடிப்பில்

2024 போர்ஷே 911 Carrera, 911 Carrera 4 GTS விற்பனைக்கு வெளியானது

இந்திய சந்தையில் போர்ஷே நிறுவனத்தின் 911 Carrera மற்றும் ஹைபிரிட் பவர்டிரையின் பெற்ற 911 Carrera 4 GTS என இரண்டு மாடல்களும் முறையே ரூ.1.99 கோடி மற்றும் ரூ.2.75 கோடியிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் இரண்டு 911 காரேரா மாடல்களுக்கும் முன்பதிவு நடைபெற்று வரும் நிலையில், டெலிவரி நடப்பு ஆண்டின் இறுதியில் மேற்கொள்ளப்பட உள்ளது. 3.0 லிட்டர் ட்வின் டர்போ பாக்ஸர் என்ஜினை பெறுகின்ற போர்ஷே 911 Carrera மாடல் அதிகபட்சமாக 394hp பவர் மற்றும் 450Nm … Read more

மட்டக்களப்பு மாவட்ட சாரணர் அமைப்பின் வருடாந்த பொதுக்கூட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்பட்டு வரும் பாடசாலை மற்றும் சகல சாரணர் அமைப்புகளின் 2024 ஆம் வருடத்திற்கான பொதுக்கூட்டம் நேற்று (30) மட்டக்களப்பு மாவட்ட செயலக மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட சாரணர் அமைப்பின் தலைவரும் அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளர் மான திருமதி ஜஸ்டிங்கா முரளிதரன் தலைமையில் இடம்பெற்ற, இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கலாசார பண்பாட்டாலுவல்கள் அமைச்சின் அதிகாரியும் மாவட்ட சாரணர் இயக்கத்தின் பொதுச் செயலாளருமான சரவணமுத்து நவநீதன் வரவேற்புரை நிகழ்த்தினார். மட்டக்களப்பு மாவட்டத்தில் 115 பதிவு செய்யப்பட்ட … Read more

வாந்தி எடுத்ததற்காக 4 வயது சிறுவன் அடித்துக் கொலை… தாயின் ஆண் நண்பர் கைது – திருப்பூர் கொடூரம்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்தவர் திவ்யா (27). இவருடைய கணவர் வன்மீகநாதன் (33). இத்தம்பதியின் மகன் பழனிவேல்ராஜன்(4). தம்பதிக்கு இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். திவ்யா தனது 4 வயதுக் குழந்தையுடன் தாய் வீட்டில் வசித்து வந்தார். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி (28). இவரும் மனைவியை பிரிந்து வாழ்கிறார். பார்த்தசாரதிக்கும், திவ்யாவுக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தனது 4 வயதுக் குழந்தையான … Read more

சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் கை ஓங்கியுள்ளது: திமுக ஆட்சி மீது பழனிசாமி குற்றச்சாட்டு

சென்னை: திமுக ஆட்சியில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் கைஓங்கியுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா? சட்டவிரோத ஆட்சியா? என்று தெரியாமல் மக்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர். கடந்த 36 மாத திமுக ஆட்சியில் சட்டத்தைக் காக்கக்கூடிய காவலர்களின் கையைவிட, சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோரின் கைகளே ஓங்கி இருக்கின்றன. பல ஆண்டுகளுக்குப் பிறகு கள்ளச்சாராய சாவுகள், கோவையில் … Read more

வீட்டு உரிமையாளரை அடித்த வழக்கில் சமாஜ்வாதி எம்பி ஆசம் கானுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

ராம்பூர்: உத்தர பிரதேசம் துங்கர்பூர் பகுதியில் வசித்து வந்த வீட்டு உரிமையாளர் அப்ரார், கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி போலீஸில் ஒரு புகார் அளித்தார். அலே ஹாசன் மற்றும் ஒப்பந்ததாரர் பர்கத் அலி ஆகிய இருவர் தனது வீட்டுக்குள் புகுந்து தன்னை தாக்கிவிட்டு, வீட்டைக் கொள்ளையடித்ததாக அந்தப் புகாரில் கூறியிருந்தார். மேலும் தன்னை கொலை செய்யவும், தனது வீட்டை முற்றிலுமாக இடித்து தரைமட்டமாக்கவும் அவர்கள் முயன்றதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்த சம்பவத்துக்குப் பின்னால் சமாஜ்வாதி கட்சி … Read more

காமெடி டூ ஹீரோ.. அசத்தும் சூரியின் வளர்ச்சி, கருடன் படத்திற்கு இவ்வளவு சம்பளமா

Soori Salary Details: காமெடி நடிகராக நடித்து வந்த சூரி தற்போது ஹீரோவாக களமிறங்கி நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது கருடன் படத்தில் நடித்திருக்கும் நடிகர் சூரி வாங்கிய சம்பள எவ்வளவு என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து 76 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 76 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. சென்னையில் தொடர்ந்து 76 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல், விலையில் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், டீசல் ரூ.92.34-க்கும் … Read more