நான் சிவகார்த்திகேயனாகவோ, விஜய்சேதுபதியாவோ இருந்தா என்ன பண்ணியிருப்பேன் தெரியுமா?.. சூரி பளிச்!

சென்னை: சூரி நடித்துள்ள கருடன் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் சூரிக்காக விஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் ஒரே மேடையில் இணைந்து அவருக்காக குரல் கொடுத்ததுதான். விஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன் உடன் பல படங்களில் சூரி நடித்துள்ளார். அந்த நட்புக்காக வெற்றிமாறன் கதையில் துரை செந்தில்குமார்

மழையுடன் டெங்கு பரவும் அபாயத்தைக் குறைப்பதற்கு அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியதன் அவசியம் 

  மே 26 முதல் தேசிய டெங்கு விழிப்புணர்வு வாரம். மழையுடன் கொழும்பில் டெங்கு பரவும் அபாயத்தைக் குறைப்பதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். மே 26 முதல் ஜூன் முதலாம் திகதி வரை டெங்கு ஒழிப்பு வாரத்தில் கல்வி அமைச்சின் ஊடாக பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை தெளிவுபடுத்தும் வகையில் விசேட விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டத்தை … Read more

CBI: நர்சிங் கல்லூரியிடம் லஞ்சம்; சிபிஐ அதிகாரி உட்பட 13 பேரைக் கைதுசெய்த சிபிஐ!

மத்தியப் பிரதேசத்தில் நர்சிங் கல்லூரிகளுக்கு சாதகமான ஆய்வறிக்கை வழங்க லஞ்சம் வாங்கியது தொடர்பாக, சிபிஐ அதிகாரி உட்பட 13 பேரை சிபிஐ கைதுசெய்திருக்கிறது. முன்னதாக, மாநிலம் தழுவிய அளவில் நர்சிங் கல்லூரிகளில் ஆசிரியர்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் தொடர்பாக ஆய்வு நடத்துமாறு மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. பின்னர், நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க நர்சிங் கல்லூரிகளில் ஆய்வு மேற்கொள்ள, ஏழு முக்கிய குழுக்களையும், சிபிஐ அதிகாரிகள் அடங்கிய மூன்று முதல் நான்கு துணை குழுக்களையும் சிபிஐ … Read more

மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை திட்ட மதிப்பீடு ரூ.2,021 கோடியாக உயர்வு

மதுரை: மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை திட்ட மதிப்பீடு ரூ.2021.51 கோடியாக மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. மதுரை அருகே தோப்பூரில் சுமார் 20 ஆண்டு கோரிக்கைக்கு பிறகு 222 ஏக்கரில் ‘எய்ம்ஸ்’ (அனைத்து இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகம்) மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அரசு கடந்த 2018 டிசம்பரில் ஒப்புதல் அளித்தது. கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன் 2019 ஜனவரியில் பிரதமர் நரேந்திர மோடி, இந்த மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். ஆனாலும், 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் மதுரை ‘எய்ம்ஸ்’ … Read more

“காங்கிரஸ், கூட்டணிக் கட்சிகள் 60 ஆண்டுகளாக நாட்டை நாசப்படுத்தி விட்டன” – மோடி பேச்சு

கிழக்கு சம்பரான்: காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சிகளும் சேர்ந்து 60 ஆண்டுகாலமாக நாட்டை நாசப்படுத்தி விட்டதாகவும், 3-4 தலைமுறைகளின் வாழ்க்கையை அழித்துவிட்டதாகவும் பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார். பிஹார் மாநிலம் கிழக்கு சம்பாரனில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “முதல் 5 கட்ட தேர்தல் நேற்றுடன் நிறைவடைந்தது. முதல்கட்டத்தில் இண்டியா கூட்டணி படுதோல்வி அடைந்தது. அடுத்தடுத்த கட்டங்களில் இண்டியா கூட்டணி சரிந்தது. நேற்று நடந்த ஐந்தாம் கட்டத்தில் இண்டியா கூட்டணி முற்றிலும் தோல்வியடைந்தது. … Read more

கருந்துளையில் இருந்து எக்ஸ் கதிர்கள் வெளியேற்றம்: இஸ்ரோவின் அஸ்ட்ரோசாட் விண்கலம் கண்டுபிடிப்பு

சென்னை: விண்வெளியின் கருந்துளையில் இருந்து அதிக ஆற்றலுடன் கூடிய எக்ஸ் கதிர்கள் சீரற்ற நிலையில் வெளியேறுவதை இஸ்ரோவின் அஸ்ட்ரோசாட் விண்கலம் கண்டறிந்துள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சார்பில் வானியல் ஆய்வுக்காக தயாரித்த அஸ்ட்ரோசாட் செயற்கைக்கோள் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 2015 செப்டம்பர் 28-ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. விண்வெளியில் உள்ள புற ஊதாக் கதிர்கள், அங்கு பரவும் எக்ஸ்ரே கதிர்கள் இயக்கம், நட்சத்திரங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்வதற்கு அஸ்ட்ரோசாட் அனுப்பப்பட்டது. இது … Read more

`கொட்டுக்காளி' படத்தை வெற்றி மாறன் சார்கிட்ட காட்டுறதுக்கு வெயிட் பண்றோம்" – சிவகார்த்திகேயன்

வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ‘கொட்டுக்காளி’ படங்களைத் தொடர்ந்து ‘கருடன்’ படத்திலும் கதாநாயகன் அவதாரம் எடுத்துள்ளார் நடிகர் சூரி. `கூழாங்கல்’ படத்தின் இயக்குனர் பி.எஸ் வினோத்ராஜ் இயக்கத்தில், சூரி நடித்துள்ள ‘கொட்டுக்காளி’ திரைப்படம் சர்வதேச அங்கீகாரங்களைப் பெற்று வருகிறது. இந்நிலையில் இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில், சூரி நடித்துள்ள ‘கருடன்’ திரைப்படம் மே 31ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதையொட்டி இன்று சென்னையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் வெற்றிமாறன், சசிகுமார், … Read more

26 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை

சென்னை தமிழகத்தின் 26 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 3 மணி நேரத்தில் 26 தமிழக மாவட்டங்களில் மழை பெய்யலாம் என தெரிவித்துள்ளது. அதாவது சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ,வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை,கிருஷ்ணகிரி ,தர்மபுரி, ஈரோடு, நீலகிரி, சேலம், நாமக்கல். திருச்சி,பெரம்பலூர், விழுப்புரம்,திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், கன்னியாகுமரி செங்கல்பட்டு, கடலூர், கரூர்.,கள்ளக்குறிச்சி. மயிலாடுதுறை, கோவை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது … Read more

Jailer movie: மலையாளத்திலும் ஜெயிலர் படம் வெற்றிபெற ரஜினிதான் காரணம்.. மோகன்லால் பளீச்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, மோகன்லால், சிவராஜ் குமார், சுனில், ஜாக்கி ஷெராப் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த ஆண்டில் வெளியான படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியிருந்த இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்தார். முன்னதாக விஜய்யின் பீஸ்ட் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்த சூழலில் அந்த படம்

இன்று தேசிய துக்க தினமாகப் பிரகடனம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரயீஸி யின் திடீர் மரணத்தை முன்னிட்டு இலங்கை அரசாங்கம் இன்று (21) தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தியுள்ளது. அரசாங்கத்தின் சகல நிறுவனங்களிலும் தேசியக் கொடியை இன்று (21)அரைக்கம்பத்தில் பறக்க விடுமாறு பொது நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன மேலும் தெரிவித்ததாக அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது. .