`அரக்கோணம் ஜி.ஹெச்சில் வெடிகுண்டு’ – போதையில் 100-க்கு போன் செய்த ஆசிரியர்… கைதுசெய்த போலீஸ்!
ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள அரக்கோணம் அரசு மருத்துவமனையில் `வெடிகுண்டு’ வைக்கப்பட்டிருப்பதாகவும், எந்த நேரத்திலும் வெடிக்கலாம் என்றும் நேற்று இரவு காவல்துறை கட்டுப்பாட்டு அறை எண் 100-ஐ இரண்டு முறை தொடர்புகொண்டு மர்ம நபர் ஒருவர் `உளறல்’ மிரட்டல் விடுத்திருக்கிறார். உளறல் பேச்சை அலட்சியமாக எடுத்துக்கொள்ளாமல், உடனடியாக அரக்கோணம் நகரப் போலீஸார் உஷார்ப்படுத்தப்பட்டு அரசு மருத்துவமனை முழுவதுமாக சோதனை செய்யப்பட்டது. தீவிர சோதனையில் சந்தேகத்திற்கிடமாக எந்த விதமான பொருள்களும் சிக்கவில்லை. போன் கால் `புரளி’ என்பதை உறுதி செய்துகொண்ட போலீஸார், … Read more