இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி.. MS Dhoni-ஐ விட யார் சிறந்தவர் -BCCI திட்டம்

Who is Indian Team New Head Coach: டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவடைகிறது. அடுத்ததாக இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளராக உள்ள ஸ்டீபன் ஃப்ளெமிங்கை நியமிக்க இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியை பிசிசிஐ நம்பியுள்ளது. பிசிசிஐ மற்றும் ஃப்ளெமிங் இடையேயான ஒப்பந்தத்தை உருவாக்க எம்.எஸ். தோனியின் உதவியை இந்தியன் கிரிக்கெட் வாரியம் எதிர்பார்க்கிறது. ஸ்டீபன் ஃப்ளெமிங்கிடம் எம்.எஸ். தோனி பேச வேண்டும் … Read more

Ilaiyaraaja: “200 இளையராஜாக்கள் உருவாக வேண்டும்" – ஐஐடியில் நெகிழ்ந்து பேசிய இளையராஜா

சென்னை ஐஐடி வளாகத்தில் இசை ஆராய்ச்சி மையத்திற்கான அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த இசை ஆராய்ச்சி மையத்திற்கு ‘IITM – Maestro Ilaiyaraaja Centre For Music Learning & Research’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினாராகக் கலந்து கொண்ட இளையராஜா, இந்த ஆராய்ச்சி மையத்திற்கான அடிக்கல்லை நாட்டினார். அதுமட்டுமின்றி, இந்த இசை ஆராய்ச்சி மையத்திற்கு தனது இசைக் குறிப்புகளை மாணவர்கள் கற்றுக் கொள்வதற்காக இளையராஜா வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இவ்விழாவில் பேசிய … Read more

ஆட்டோமேடிக் கார்கள் பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான 10 விஷயங்கள்!

ஆட்டோமேடிக் கார்கள் மிக குறைந்த விலையில் இருப்பதால், பெரும்பாலான இளம் வயதினர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்ட கார்களுக்கு மாறி வருகின்றனர். பல ஏஎம்டி கார்கள் ரூ. 5 லட்சம் விலையில் விற்பனைக்கு கிடைக்கின்றன. இதற்கு மிக முக்கிய காரணம், மிக எளிமையாக கார்களை இயக்கலாம், ஆட்டோமேடிக் இயக்கம் என்பதால் உங்களுக்கு சிக்கல்கள் இருக்காது. இதற்காகவே மேனுவல் டிரான்ஸ்மிஷன் கார்களில் இருந்து மக்கள் ஆட்டோமேடிக் கார்களுக்கு மாறுவதற்கான முக்கிய காரணியாகும். அந்தவகையில், ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கார்களை பற்றிய 10 … Read more

லண்டனில் இருந்து சிங்கப்பூர் சென்றுகொண்டிருந்த விமானம் மோசமான வானிலை காரணமாக அவசரமாக தரையிறங்கியது… ஒருவர் மரணம் 30 பேர் காயம்…

லண்டனில் இருந்து சிங்கப்பூர் சென்றுகொண்டிருந்த விமானம் மோசமான வானிலை காரணமாக பாங்காக்கில் அவசரமாக தரையிறங்கியது. 211 பயணிகள் மற்றும் 18 விமான பணியாளர்களுடன் சிங்கப்பூர் சென்று கொண்டிருந்த போயிங் 777-300ER விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. A Singapore Airlines flight from London made an emergency landing in Bangkok on Tuesday due to severe turbulence, the airline said, with one passenger on board … Read more

\"நல்லா சாப்பிட்டு கவனமா இருங்க..\" ஜெகநாதனர் மோடியின் பக்தர் என்ற பத்ராவுக்கு விகே பாண்டியன் பதிலடி

புவனேஸ்வர்: புரி ஜெகநாதர் பிரதமர் மோடியின் பக்தர் என்று பாஜகவின் சம்பித் பத்ரா கூறியது சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், இதற்கு பிஜு ஜனதா தளத்தில் விகே பாண்டியன் பதிலடி கொடுத்துள்ளார். ஒடிசாவில் உள்ள உலக புகழ்பெற்ற கோயில் என்றால் அது பூரி ஜெகநாதர் ஆலயம். ஒவ்வொரு ஆண்டும் உலகெங்கும் இருந்தும் பல லட்சம் பேர் இந்த கோயிலுக்கு Source Link

Garudan: சூரிக்காக கைக்கோர்த்த சிவகார்த்திகேயன் -விஜய் சேதுபதி.. கருடன் பட அதிரடி ட்ரெய்லர் ரிலீஸ்!

சென்னை: நடிகர் சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள கருடன் படம் வரும் மே மாதம் 31ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது இந்த படத்தின் டைட்டில் ப்ரோமோ வீடியோ, கிளிம்ப்ஸ் முன்னதாக வெளியாகி மிகப்பெரிய அளவில் கவனத்தை பெற்ற சூழலில் இன்றைய தினம் படத்தின் ட்ரெய்லர் வெளியிட்டு விழா சென்னையில் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது. ட்ரெய்லர்

புதிய நிறத்தில் 2024 கேடிஎம் 200 டியூக் விற்பனைக்கு வெளியானது

கேடிஎம் நிறுவனத்தின் பிரபலமான டியூக் வரிசையில் இடம்பெற்றுள்ள 200 டியூக் பைக்கின் 2024 ஆம் ஆண்டிற்கு என புதிதாக எலக்ரிக் ஆரஞ்சு, டார்க் கிளாவனோ என இரண்டு நிறங்களை சேர்த்து விற்பனைக்கு பழைய டார்க் சில்வர் மெட்டாலிக் என மொத்தமாக மூன்று நிறங்களில் வெளியிட்டுள்ளது. 200சிசி லிக்விட்-கூல்டு என்ஜினை பெறுகின்ற கேடிஎம் 200 டியூக் பைக் அதிகபட்சமாக 25 hp பவர் மற்றும் 19.3 Nm டார்க் வழங்குகின்றது. இந்த மாடலில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் … Read more

மூன்று கூட்டங்கள் ஊடாக காலி மாவட்டத்தின் கருத்துக்களை பெற உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்கால செயலகம் நடவடிக்கை

இனப்பிரச்சினை மற்றும் போருக்குப் பின்னரான நிலைமைகள் தொடர்பில் கருத்துப்பரிமாறவும் அது தொடர்பில் கவனம் செலுத்தும் முயற்சியாகவும் உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்காலச் செயலகம் (ISTRM) காலி மாவட்டச் செயலகத்தில் அண்மையில் மூன்று கூட்டங்கள் மூலம் பல்வேறு தரப்பினர்களின் கருத்துக்களைப் பெற்றது. அரச அதிகாரிகள் முதல் கீழ்மட்ட அமைப்புக்கள் வரை பலதரப்பட்ட மக்கள் கலந்து கொண்ட இந்த கலந்துரையாடலில் அரச அதிகாரிகள், ஊடகவியலாளர்கள், கீழ்மட்ட அமைப்புகளை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட நபர்களின் கருத்துக்கள் பெறப்பட்டன. நல்லிணக்கச் செயற்பாட்டில் உள்நாட்டு … Read more

ராஜேஷ் தாஸ் பங்களாவில் மின்சாரம் துண்டிப்பு; பின்னணியில் பீலா வெங்கடேசனா? – என்ன நடந்தது?

தமிழக காவல்துறையில் சிறப்பு டி.ஜி.பி-யாகப் பணியாற்றியவர் ராஜேஷ் தாஸ். இவரின் முன்னாள் மனைவி பீலா வெங்கடேசன். இவர் தமிழக எரிசக்தித்துறையில் செயலாளராக இருந்து வருகிறார். ராஜேஷ் தாஸ், பீலா வெங்கடேசன் ஆகியோர் குடும்பத்துடன் கேளம்பாக்கம் தையூரில் உள்ள பங்களா வீட்டில் வசித்து வந்தனர். ராஜேஷ் தாஸ், பணியிலிருக்கும்போது பாலியல் குற்றச்சாட்டில் சிக்கினார். இது தொடர்பான வழக்கில் ராஜேஷ் தாஸுக்கு நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்தது. இந்தச் சூழலில் ராஜேஷ் தாஸும் பீலா வெங்கடேசனும் பிரிந்தனர். இது தொடர்பான … Read more