வெளிநாடுகளுக்கு புலம்பெயர்வோர் நலத்திட்ட உதவி பெற அயலக தமிழர் நல வாரியத்தில் சேர அழைப்பு
சென்னை: அயலகத் தமிழர் நலத்துறை நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: வேலைவாய்ப்பு, கல்வி, வணிகம் போன்ற காரணங்களுக்காக தமிழர்கள் அயல்நாடுகளுக்கு புலம்பெயர்வது சமீபகாலங்களில் அதிகரித்து வருகிறது. இவ்வாறு புலம்பெயர்ந்து வெளிநாடுகளிலும், இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் வாழும் தமிழர்களின் நலன் காக்க ‘அயலகத் தமிழர் நல வாரியம்’ அமைக்கப்பட்டு, அதன்மூலம் அயலகத்தில் உள்ள தமிழர்களுக்கென பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. அதன்படி 18 முதல் 55 வயது வரை உள்ள அயலகத் தமிழர்கள், அயலகத் தமிழர் நலத்துறையின் … Read more