குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி தொழில் பூங்கா: இஸ்ரோவுடன் தமிழக அரசின் ‘டிட்கோ’ ஒப்பந்தம்
சென்னை: இஸ்ரோவின் ‘இன்ஸ்பேஸ்’ நிறுவனத்துடன் இணைந்து குலசேகரன்பட்டினத்தில் 1,500 ஏக்கரில் விண்வெளி தொழில் பூங்கா அமைப்பதற்கான நில எடுப்பு பணிகள் நடைபெற்று வருவதாக தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ) தெரிவித்துள்ளது. இந்தியாவின் விண்வெளி தொழில் துறையில் அரசு நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இதன் மூலம் இத்துறை படிப்படியாக உலக நாடுகள் திரும்பி பார்க்கும்வகையில் வளர்ந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் பாதுகாப்பு தொழில் வழித்தடம் அறிவிக்கப்பட்டு விமான … Read more