சென்னையை குளிர்வித்த கோடை மழை: வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி
சென்னை: சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் இன்று (வியாழக்கிழமை) காலை தொடங்கி பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றிரவும் ஆங்காங்கே மழை பெய்த நிலையில் வெப்பத்தால் வாடிய சென்னை மக்களை கோடை மழை குளிர்வித்துள்ளது. தமிழகத்தில் தற்போது பல்வேறு மாவட்டங்களில் கோடை வெயிலுக்கிடையில், மழை பரவலாக பெய்து வருகிறது. தென் மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்களில் அனைத்து இடங்களிலும் பரவலாக பெய்து வருகிறது. தஞ்சை, நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கனமழை தொடர்கிறது. அதிகபட்சமாக பட்டுக்கோட்டையில் இன்று காலை 8 … Read more