கோழிக்கோட்டில் மோசமான வானிலை: கோவைக்கு திருப்பிவிடப்பட்ட துபாய் விமானங்கள்
கோவை: கேரள மாநிலம் கோழிக்கோட்டில் மோசமான வானிலை நிலவியதால், துபாயிலிருந்து வந்து இரண்டு விமானங்கள் கோவை விமான நிலையத்துக்கு திருப்பிவிடப்பட்டன. சவுதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தின் தலைநகரமான தம்மாம் மற்றும் துபாயிலிருந்து இரண்டு விமானங்கள் காலை கேரள மாநிலம் கோழிக்கோடுக்கு சென்று கொண்டிருந்தன. மழை மற்றும் மோசமான வானிலை நிலவிய காரணத்தால் மேற்குறிப்பிட்ட இரு விமானங்களும் கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதி கிடைக்கவில்லை. இதனையடுத்து, இரு துபாய் விமானங்களும் கோவை சர்வதேச விமான நிலையத்துக்கு திருப்பிவிடப்பட்டன. … Read more