புது மனைவியுடன் சண்டை; அதிகாலையில் பெற்றோர், சகோதரர்கள் என 8 பேரை கோடரியால் வெட்டிக் கொன்ற வாலிபர்!
மத்தியப் பிரதேச மாநிலம், சிந்த்வாராவில் உள்ள போதல் கச்சார் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சுக்ராம். இவருக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்தது. சற்று மனநிலை பாதிக்கப்பட்ட சுக்ராம், அடிக்கடி தனது மனைவியோடு சண்டை போட்டுக்கொண்டிருந்தார். இன்று அதிகாலையில் கணவன், மனைவி இடையே மீண்டும் சண்டை ஏற்பட்டது. இந்தச் சண்டை முற்றிய நிலையில் சுக்ராம் வீட்டில் கிடந்த கோடரியை எடுத்து தனது மனைவியை வெட்டிக் கொலைசெய்தார். பின்னர் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த தனது பெற்றோர், சகோதரர்கள், குழந்தைகள் என 8 பேரை … Read more