தோட்டத் தொழிலாளர்களின் ஜீவனோபாய சிக்கல்களுக்கு தீர்வு வழங்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு – வெகுசன ஊடக அமைச்சர்
அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தில் காணப்படும் பொருளாதார சிக்கல்களுக்குத் தீர்வு வழங்குவதே என அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுசன ஊடக அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (28)இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்களுடனான சந்திப்பின் போது முன்வைக்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். இன்றைய பொருளாதார சிக்கலில் தோட்டத் தொழிலாளர்களின் போசனை மட்டம் மற்றும் வாழ்க்கைத் தரத்தைப் பாதுகாப்பதற்காகக், குறைந்;தது அவர்களுக்கு உரித்தாக வேண்டிய சம்பள மட்டம் … Read more