சேலம்: சொத்துக்காக தந்தையை அடித்துக் கொன்று விட்டு நாடகமாடிய மகன் – போலீஸில் சிக்கியது எப்படி?!
சேலம், கருப்பூர் அருகில் உள்ள கோட்ட கவுண்டம்பட்டி ஈச்சம் காட்டூரை சேர்ந்தவர் காளியப்பன். விவசாயியான இவருக்கு அலமேலு என்ற மனைவியும், சீனிவாசன் என்ற மகனும் உள்ளனர். உடல் நலம் பாதிக்கப்பட்ட காளியப்பன் வீட்டில் இருந்து வந்தார். நேற்று முன்தினம் கோயில் திருவிழாவிற்காக மனைவி அலமேலு சென்றிருக்கிறார். திரும்பி வந்து பார்த்தபோது காதில் ரத்தம் வந்த நிலையில் தலையில் காயத்துடன் கணவர் காளியப்பன் கிடந்தார். உடனடியாக அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதற்குள் அவர் இறந்து … Read more