புதுச்சேரி: 500 பக்கங்கள்… 80 சாட்சிகள்… ஒன்பது வயது சிறுமி கொலை வழக்கின் குற்றப்பத்திரிகை தாக்கல்!

புதுச்சேரி, முத்தியால்பேட்டை சோலை நகரைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுமி, பிப்ரவரி 2-ம் தேதி வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்தபோது  மாயமானார். அதையடுத்து 5-ம் தேதி வீட்டிற்கு அருகில் இருந்த கழிவு நீர் கால்வாயில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, கழுத்தை நெரித்துக் கொலை செய்த வழக்கில் விவேகானந்தன் என்ற முதியவரையும், கருணாஸ் என்ற இளைஞரையும் கைதுசெய்தனர், முத்தியால்பேட்டை போலீஸார். அதையடுத்து சீனியர் எஸ்.பி கலைவாணன் தலைமையில், எஸ்.பி … Read more

மேற்கு மாவட்டங்களில் சீரான குடிநீர் விநியோகித்திட ஒருங்கிணைந்து செயல்படுக: முதன்மைச் செயலர் அறிவுரை

கோவை: சீரான முறையில் குடிநீர் விநியோகித்திட அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்ட அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் அரசு முதன்மைச் செயலாளர் பேசினார். கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் சீரான முறையில் குடிநீர் விநியோகம் இல்லை என பொதுமக்கள் அடிக்கடி போராட்டம் நடத்தி வருகின்றனர். இச்சூழலில், கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் பொதுமக்களுக்கு தடையின்றி சீரான முறையில் … Read more

“கோவிஷீல்டு செலுத்திக் கொண்டவர்கள் பாஜகவுக்கு எதிராக வாக்களிப்பர்” – அகிலேஷ் யாதவ் பேச்சு

புடவுன்: “கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் பாஜகவுக்கு எதிராக வாக்களிப்பார்கள்” என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பேசினார். உத்தரப் பிரதேச மாநிலம் புடவுனில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் ஆதித்யா யாதவை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியது: “பாஜகவினால் அரசியல் சாசனத்துக்கு மட்டும் அச்சுறுத்தல் இல்லை, அவர்களின் முடிவால் உங்களின் வாழ்க்கையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் தங்களின் சான்றிதழ்களைப் பார்க்கும்போது என்ன நினைத்துக் கொள்வார்கள் … Read more

டி20 உலகக் கோப்பை அணியில் 4 ஸ்பின்னர்கள் எதற்கு தெரியுமா? சன்பென்ஸ் வைத்த ரோஹித் சர்மா

ICC T20 World Cup 2024: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடர் ஜூன் 1ஆம் தேதி முதல் அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் நாடுகளில் நடைபெற உள்ளது. ஜூன் 29ஆம் தேதி நடைபெறும் இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. கேப்டனாக ரோஹித் சர்மாவும் (Rohit Sharma), துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும் உள்ளிட்டோர் அடங்கிய 15 வீரர்கள் கொண்ட ஸ்குவாட் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, கில், ரின்கு சிங், கலீல் … Read more

மீண்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் கனமழை

துபாய் ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் கனமழை பெய்யக் கூடும் என எச்சரிக்கபட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் மத்தியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் கனமழை பெய்து மக்களின் இயல்பு வாழ்க்கையை பெரிதும் பாதித்தது. சுமார் இரண்டு வாரங்களுக்கு பின்னர், ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் கனமழை பெய்து வருவ்துடன் இடி, மின்னல் ஆகியவையும் ஏற்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டு உள்ளது. இங்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. தேசிய வானிலை ஆய்வு மையம் ஐக்கிய … Read more

ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2'

கடந்த 1996ம் ஆண்டில் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெளிவந்த திரைப்படம் 'இந்தியன்'. தற்போது ஷங்கர், கமல்ஹாசன் கூட்டணியில் 'இந்தியன் 2' படம் உருவாகி வருகிறது. இதில் காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் பீர்த் சிங், விவேக், மனோபாலா, சமுத்திரக்கனி, பிரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். லைகா மற்றும் ரெட் ஜெயன்ட் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு நிறைவு பெற்று கடந்த … Read more

Kubera movie: கட்டுக்கட்டாக பணம்.. வெளியானது குபேரா படத்தில் நாகார்ஜூனா பர்ஸ்ட் லுக்!

சென்னை: நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. அந்த வகையில் அவரது இயக்கம் மற்றும் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ளது ராயன் படம். இந்தப்படம் வரும் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து விரைவில் அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து படத்தின் டீசரும் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக

தேர்தல் நேர கைது: உச்ச நீதிமன்றத்தின் கேள்வியால் அமலாக்கத்துறை நடவடிக்கைக்குச் சிக்கலா?

டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது. அமலாக்கத்துறை அனுப்பிய ஒன்பது சம்மன்களுக்கு அவர் பதிலளிக்காத நிலையில், கடந்த மார்ச் 20-ம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். உச்ச நீதிமன்றம் தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கெஜ்ரிவால், தான் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்சீவ் கண்ணா, அமலாக்கத்துறையை நோக்கி பல கேள்விகளை முன்வைத்தார். ‘மக்களவை … Read more

சேலம் – தீவட்டிப்பட்டியில் கோயில் வழிபாடு நடத்துவதில் இரு தரப்பு மோதல்: வன்முறையால் போலீஸ் குவிப்பு

சேலம்: சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டியில் கோயில் வழிபாடு நடத்துவதில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் கல் வீசி கடைகளுக்கு தீ வைத்த சம்பவத்தை அடுத்து, மூன்று மாவட்ட போலீஸார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். சேலம், தீவட்டிப்பட்டியில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். ஒரு தரப்பினர் மட்டுமே இந்த திருவிழாவை நடத்தி வந்தனர். இந்த ஆண்டு மற்றொரு தரப்பைச் சேர்ந்தவர்களும் மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் … Read more

உ.பி.யில் மேனகா காந்தி வேட்புமனு தாக்கல் – ‘விலகி’ நின்ற பாஜக பிரமுகர்கள்!

புதுடெல்லி: உத்தரப் பிரதேசம் மாநிலம் சுல்தான்பூர் தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தி வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார். இதற்கான ஊர்வலத்தில் பாஜகவின் முக்கியத் தலைவர்கள் யாருமே கலந்துகொள்ளாமல் விலகி நின்றது தெரிய வந்துள்ளது. காங்கிரஸின் காந்தி குடும்பத்து இளைய மருமகளாக இருப்பவர் மேனகா காந்தி. பாஜகவின் மூத்த தலைவராக இருக்கும் இவர் தன் கட்சிக்காக உ.பி.யின் சுல்தான்பூரில் மீண்டும் போட்டியிடுகிறார். இவரது மகனான வருண் காந்திக்கு இந்த முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. … Read more