சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் 2024 பிளேஆஃப்களுக்கு தகுதி பெற முடியுமா?

புதன்கிழமை சென்னையில் எம்.ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக போட்டியில் சென்னை அணி தோல்வி அடைந்தது. இந்நிலையில் தற்போது புள்ளி பட்டியலில் 4வது இடத்தில் இருக்கும் சென்னை அணி ஐபிஎல் 2024 பிளேஆஃப்களை இழக்கும் அபாயத்தில் உள்ளது. 2024 ஐபிஎல் தொடரின் ஐந்தாவது போட்டியில் சூப்பர் கிங்ஸ் தோல்வியடைந்துள்ளது. ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை அணி பிளே ஆப்க்கு தகுதி பெற இன்னும் நான்கு போட்டிகள் உள்ளன, 16 புள்ளிகளை எட்ட இன்னும் … Read more

Amazon Great Summer Sale ஆரம்பம்: இந்த சிறந்த ஸ்மார்ட்போன்களுக்கு செம தள்ளுபடி..!

Amazon Great Summer Sale Today: அமேசான் நிறுவனத்தின் கிரேட் சம்மர் சேல் (Amazon Great Summer Sale) விற்பனை இன்று (மே 2, 2024) மதியம் 12 மணிக்கு தொடங்கும். நீங்கள் பிரைம் உறுப்பினராக இருந்தால், நள்ளிரவு 12 மணி முதல் அமேசான் கிரேட் சம்மர் சேல் விற்பனையில் முன்கூட்டியே பல பொருட்களை தள்ளுபடி விலையில் வாங்கி குவித்திருக்கலாம். ஆனாலும் நோ வெரி.. மதியம் 12 மணி முதல் தள்ளுபடி விலையில் உங்களுக்கு பிடித்த பிராண்டுகளை … Read more

தாம்பரத்தில் இருந்து கொல்கத்தா சந்த்ராகச்சி இடையே 2 வாராந்திர சிறப்பு ரயில்கள் அறிவிப்பு…

சென்னை: தாம்பரத்தில் இருந்து கொல்கத்தா சந்த்ராகச்சி இடையே 2 வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. இந்த ரயிலானது,  எழும்பூர் வழியாக தாம்பரத்தில் இருந்து இயக்கப்படுகிறது. இதுதொடர்பாக  தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் 2 வாராந்திர சிறப்பு ரயில்கள் சென்னை எழும்பூர் வழியாக இயக்கப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. சிறப்பு ரயில் 1 வண்டி எண் 06089 தாம்பரம் – சந்த்ராகச்சி வாராந்திர சிறப்பு ரயில், மே 8, 15, 22, 29ம் … Read more

வாரணாசியில் மோடியை எதிர்த்து போட்டி.. திடீரென அறிவித்த காமெடி நடிகர்.. இப்படி ஒரு காரணமா?

அகமதாபாத்: பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட இருப்பதாக பிரபல காமெடி நடிகரும் மிமிக்ரி கலைஞருமான ஷ்யாம் ரங்கீலா அறிவித்துள்ளார். போட்டியிடுவதற்கான காரணத்தையும் அவரே கூறியுள்ளார். நாட்டின் 18வது லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் 2 கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்த நிலையில், 3-ம் கட்ட வாக்குப்பதிவு வரும் மே Source Link

நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்?

பகவதி, சென்னை 28, சுப்பிரமணியபுரம், சரோஜா, எங்கேயும் எப்போதும் என பல படங்களில் நடித்தவர் ஜெய். தற்போது கருப்பர் நகரம், பேபி அண்ட் பேபி போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது தன்னுடைய சோசியல் மீடியாவில் நடிகை பிரக்யா நக்ராவுடன் தான் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ள ஜெய், புதிய வாழ்க்கை ஆரம்பம் கடவுள் ஆசீர்வாதத்துடன் என்றும் அதில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் பிரக்யா நக்ரா தனது கழுத்தில் தாலியுடன் அமர்ந்திருக்க, ஜெய் தனது … Read more

தனியா வாழ்றாங்களா?.. சூர்யா பற்றி ஜோதிகா என்ன சொன்னார் தெரியுமா?.. அது மட்டும்தான் பிரச்சனையே!

சென்னை: நடிகை ஜோதிகா மும்பையிலும் நடிகர் சூர்யா சென்னையிலும் வசித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. மேலும் பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்ட சிலர் ஜோதிகா மற்றும் சூர்யா இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும் பல கிசுகிசுக்கள் வெளியாகி வந்த நிலையில், தற்போது எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஜோதிகா ஒரு பேட்டி அளித்துள்ளார். அந்தப் பேட்டியில் நடிகர் சூர்யா பற்றியும்

கோவிஷீல்டு தடுப்பூசியின் பக்க விளைவுகளை ஆய்வு செய்ய நிபுணர் குழு: சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

புதுடெல்லி, உலகையே உலுக்கிய கொரோனா தொற்றுக்கு எதிராக பயன்படுத்தப்பட்ட தடுப்பூசிகளில் கோவிஷீல்டு முக்கியமானது. இங்கிலாந்தின் அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் உருவாக்கிய இந்த தடுப்பூசி உலகின் பல நாடுகளில் பயன்படுத்தப்பட்டது. இந்தியாவிலும் இந்த தடுப்பூசியை சீரம் நிறுவனம் தயாரித்து உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வினியோகம் செய்தது. இந்த தடுப்பூசியை இந்தியாவில் கோடிக்கணக்கானோர் போட்டுக்கொண்டனர். இந்த கோவிஷீல்டு தடுப்பூசி பக்க விளைவை ஏற்படுத்தும் என அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் தற்போது தெரிவித்து உள்ளது. அதாவது அரிதான சந்தர்ப்பங்களில் ரத்தம் உறைதல் மற்றும் அது தொடர்பான … Read more

ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை அணியை வீழ்த்திய பஞ்சாப்

சென்னை, ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கர்ரண் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரகானே மற்றும் கெய்க்வாட் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் இணைந்து சென்னை அணிக்கு நல்ல தொடக்கம் கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 64 ரன்கள் சேர்த்த நிலையில் இந்த ஜோடி … Read more

சீனா: சாலையில் திடீர் பள்ளம் – 19 பேர் பலி

பீஜிங், தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள அதிவேக நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 2.10 மணியளவில் திடீரென பள்ளம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த சாலையில் சென்று கொண்டிருந்த 18 வாகனங்கள் அடுத்தடுத்து பள்ளத்தில் சிக்கின. இந்த விபத்தில் 19 பேர் உயிரிழந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் பற்றி போலீசார் மாற்றும் மீட்புப்படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 500க்கும் மேற்பட்ட மீட்புப்படையினர் பள்ளத்தில் காயங்களுடன் கிடந்த 30 பேரை மீட்டு … Read more

`கொலை நடந்தது உண்மைதான்; ஆனால் இறந்தது கோல்டி பிரர் அல்ல..!' – அமெரிக்க போலீஸ் விளக்கம்

குஜராத் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பஞ்சாப் கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளி கோல்டி பிரர், அமெரிக்காவின் கலிபோர்னியா ஹோட்டலில் சுட்டுக்கொலை செய்யப்பட்டதாக செய்தி வெளியாகி இருக்கிறது. அச்செய்தியை இந்திய உளவுத்துறை இன்னும் உறுதிபடுத்தவில்லை. கோல்டி பிரர் பஞ்சாப் மற்றும் கனடாவில் மிரட்டி பணம் பறித்தல் மற்றும் ஆயுத கடத்தலில் ஈடுபட்டுள்ளான். கலிபோர்னியா ஹோட்டலில் இரண்டு பேர் கோல்டி பிரருடன் சண்டையிட்டதாகவும், அதனை தொடர்ந்து துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றதாகவும் செய்தி வெளியானது. ஆனால் இச்செய்தி உண்மையில்லை என்று அமெரிக்க … Read more