பெண் குரலில் பேசி பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – திருப்பூர் இளைஞர் சிக்கியது எப்படி?

சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை பிரிவில் பணியாற்றும் பெண் காவலர் ஒருவர், மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் பிரிவில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அந்தப் புகாரில், “கடந்த 24.4.2024-ம் ஆண்டு ஆயுதப்படையில் எழுத்தராக பணியாற்றும் ஒருவர், என்னிடம் (பெண் காவலருக்கு) போனில் பேசினார். அப்போது அவர், பெண் காவல் உயரதிகாரி ஒருவருக்கு பி.எஸ்.ஓ-வாக செல்ல விருப்பமா என்று கேட்டார். அதற்கு நான் ஒகே என்று கூறினேன். இதுதொடர்பாக ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் பேசுவதாக அந்த எழுத்தர் என்னிடம் தெரிவித்தார். அதனால் … Read more

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கல்குவாரி வெடிமருந்து கிடங்கில் விபத்து – 3 பேர் உயிரிழப்பு; உரிமையாளர் கைது

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கல்குவாரியில் நேற்று காலை வெடிமருந்து கிடங்கு வெடித்ததில் 3 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். காரியாபட்டி அருகேயுள்ள கடம்பன்குளத்தில் ஆவியூரைச் சேர்ந்த சேது, ராஜபாளையத்தைச் சேர்ந்த ராம் ஆகியோருக்குச் சொந்தமான கல்குவாரி இயங்கி வருகிறது. இங்கு நேற்று காலை வழக்கம்போல தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குவாரியில் உள்ள வெடிமருந்து கிடங்கில், வெடிபொருட்களை வேனிலிருந்து இறக்கி வைத்துக் கொண்டிருந்தனர். திடீரென வெடிபொருட்களில் உராய்வு ஏற்பட்டு, பலத்த சப்தத்துடன் வெடித்துச் சிதறின. … Read more

வட மற்றும் தென் மாநிலங்களுக்கு நிதிப் பகிர்வு பாகுபாடு பிரச்சினையை தீர்க்க அறிவார்ந்த தலைமை தேவை: ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர்

புதுடெல்லி: “வட மற்றும் தென் மாநிலங்களுக்கு நிதிப் பகிர்வு பாகுபாடு பிரச்சினையைத் தீர்ப்பதற்கு மத்திய மற்றும் மாநில அளவில் அறிவார்ந்த தலைமை தேவை” என்று ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் சுப்பாராவ் தெரிவித்துள்ளார். மத்திய அரசு அதன் வரி வருவாயில் 41 சதவீதத்தை மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என்று 15-வது நிதி ஆணையம் பரிந்துரை செய்திருந்தது. ஆனால், மத்திய அரசு 32 சதவீதம் அளவிலேயே நிதியை மாநிலங்களுடன் பகிர்கிறது. தவிர, இந்த நிதிப் பகிர்விலும் சமமின்மை நிலவுகிறது … Read more

ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா

தெலுங்கில் தொடர்ந்து முன்னணி நடிகையாக பல படங்களில் நடித்து வருபவர் இளம் நடிகை ஸ்ரீ லீலா. குறிப்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு மகேஷ்பாபு நடிப்பில் வெளியான குண்டூர் காரம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்த ஸ்ரீ லீலா அந்த படத்தில் இடம் பெற்ற குர்ச்சி மடத்தப்பெட்டி பாடலுக்கு ஆடிய நடனம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக … Read more

பஞ்சு அருணாச்சலம் இல்லைன்னா.. இளையராஜா vs வைரமுத்து மோதல்.. ஜேம்ஸ் வசந்தன் பளிச் பேட்டி!

சென்னை: இசைப் பெரியதா? மொழி பெரியதா என்கிற பஞ்சாயத்து ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் இது பொது பிரச்சனை அல்ல என்றும் இளையராஜா மற்றும் வைரமுத்து இடையே நடக்கும் தனிப்பட்ட பிரச்சனை மட்டும் தான் என இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தனது கருத்தை வெளியிட்டுள்ளார். இளையராஜா தான் வைரமுத்துவை வளர்த்து ஆளாக்கியது என சொல்வது எல்லாம் சரியான பேச்சு

ரயிலில் ரூ.4 கோடி சிக்கிய விவகாரத்தில் கைதான 3 பேர் சிபிசிஐடி முன் ஆஜர்: நயினார் நாகேந்திரனையும் அழைக்க முடிவு

சென்னை: மக்களவைத் தேர்தல் நேர கண்காணிப்பின்போது நெல்லை ரயிலில் ரூ.4 கோடி சிக்கிய விவகாரம் தொடர்பாக, பணத்துடன் பிடிபட்ட 3 பேர் நேற்றுசிபிசிஐடி போலீஸார் முன்னிலையில் ஆஜராகினர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தலையொட்டி தேர்தல் பறக்கும்படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அதன்படி, கடந்த 6-ம் தேதி சென்னை எழும்பூரிலிருந்து திருநெல்வேலி நோக்கி புறப்பட்ட நெல்லை விரைவு ரயிலில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட ரூ.4 கோடி பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பணத்தை கொண்டு … Read more

டெல்லி பள்ளிகளுக்கு குண்டு மிரட்டல்: புரளியால் மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் பீதி

புதுடெல்லி: டெல்லி மற்றும் தேசிய புறநகர் மண்டலத்தில் 100-க்கும் மேற்பட்ட பள்ளிகள் மற்றும் பிஹார் ராஜ்பவனுக்கு நேற்று இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இந்த இ-மெயில் ரஷ்யாவில் இருந்து அனுப்பப்பட்டதாக டெல்லி போலீஸார் கண்டறிந்துள்ளனர். இ-மெயில் மூலம் குண்டு வெடிப்பு மிரட்டல் விடுப்பது கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. விமான நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகள், வர்த்தக நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு நேற்று முன்தினம் இ-மெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்நிலையில் டெல்லி மற்றும் தேசிய தலைநகர் … Read more

ரஜினியுடன் இணைந்து நடனமாடும் அனிரூத்?

ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'வேட்டையன்' . இதில் ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷரா விஜயன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு பல கட்டமாக திருவனந்தபுரம், கன்னியாகுமரி, மும்பை, சென்னை, ஐதராபாத் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வந்தது. கடந்த சில நாட்களாக வேட்டையன் படத்திற்காக ஓப்பனிங் பாடல் … Read more

அப்பா நம்ம புது வீடு எப்படி இருக்கு.. மகளின் பிரம்மாண்ட பங்களாவை பார்த்து வியந்த ரஜினிகாந்த்!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரம்மாண்டமான பங்களா ஒன்றை வாங்கி உள்ளார். இந்த வீட்டின் கிரகப்பிரவேசம் அண்மையில் எளிமையாக நடைபெற்ற நிலையில், ரஜினிகாந்த், மனைவி லதா மற்றும் பேரக்குழந்தைகளுடன் வீட்டை சுற்றிப்பார்க்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 2004ம் ஆண்டு தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.