கிருஷ்ணகிரியில் வறட்சியில் வாடும் மா மரங்களுக்கு லாரிகளில் நீர் வசதி: தமிழக அரசுக்கு இபிஎஸ் கோரிக்கை

சென்னை: கிருஷ்ணகிரியில் வறட்சியால் வாடும் மா மரங்களைக் காக்க,லாரிகள் மூலம் தண்ணீர் வசதிஏற்படுத்திக் கொடுத்து, மாம்பழங்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை பெற்றுத் தர வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தின் மாம்பழத் தேவையில் பெரும்பகுதியை பூர்த்தி செய்வது சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரியைச் சேர்ந்த விவசாயிகள் தான். 62 வெளி நாடுகளுக்கு மா கூழ் ஏற்றுமதியாகிறது. இதன்மூலம் அரசுக்கு ரூ.600 கோடி அந்நிய செலாவணி கிடைக்கிறது. … Read more

“காங்கிரஸ் தொடர்ந்து பொய் சொல்லி வருகிறது” – அனுராக் தாக்கூர் குற்றச்சாட்டு

புதுடெல்லி: காங்கிரஸ் தனது தேர்தல் பிரச்சாரத்துக்காக பொய்களையும், வதந்திகளையும் பரப்பி வருகிறது என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் குற்றம்சாட்டியுள்ளார். உத்தரப் பிரதேசத்தில் இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் ‘டீப்ஃபேக் மற்றும் மார்பிங்’ வீடியோவை பரப்பியதாக காங்கிரஸ் மீது பாஜக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது. மேலும் அக்கட்சி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளது. ஜனநாயகம் அச்சுறுத்தலில் உள்ளது அல்லது இடஒதுக்கீடு பாஜகவால் பறிக்கப்படும் என காங்கிரஸார் பொய்ப் … Read more

‛ஆனந்த ராகம்…' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்

தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன், 69 உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். சென்னை அடையாறு பகுதியில் வசித்து வந்த உமா ரமணன் கடந்த சில மாதங்களாக உடல்நலப் பிரச்னையால் அவதிப்பட்டு அதற்கான சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் அவரது இல்லத்திலேயே இரவு 9:30 மணியளவில் இன்று(மே 1) காலமானார். நிழல்கள் படத்தில் பூங்கதவே தாழ் திறவாய் பாடல் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான உமா, தொடர்ந்து இளையராஜா இசையில் பல … Read more

கதறி அழும் தமிழ்… காட்டிக்கொடுத்த குறியீடு.. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!

சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில், அபி மற்றும் கவின் இருவரும் தமிழின் போட்டோவை வைத்துக்கொண்டு ரோடு ரோடாக அலைகின்றனர். மனோகரி வேலுவுக்கு போன் செய்து தமிழைத் தேடி குழந்தைகள் வந்தாலும் வருவாங்க என்று தகவல் கொடுத்து

தண்ணீர் பந்தல் அமைக்க பாஜகவினருக்கு அண்ணாமலை அறிவுறுத்தல்

சென்னை: தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை: கோடை வெப்பத்தைத் தணிக்க, பல பகுதிகளில் பாஜகவினர் நீர்மோர் பந்தல் அமைத்து, மக்களுக்கு உதவிகள் செய்து வருகிறார்கள். சென்னையில் பாஜக தலைமை அலுவலத்திலும், இன்னும் பல மாவட்ட அலுவலகங்களிலும் தினமும் நீர் மோர் வழங்கப்படுகிறது. கரோனா காலத்தில் நாம் செய்த மக்கள் சேவையைப் போல, இந்தக் கோடை வெயில் தாக்கம் போக்க, தாகம் தீர்க்கும் இந்த நற்பணியை தமிழகம் முழுவதும் பாஜக உறுப்பினர்கள் பரவலாக மேற்கொள்ள வேண்டுகிறேன். … Read more

அமித் ஷா போலி வீடியோ விவகாரம்: ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸின் எக்ஸ் கணக்கு முடக்கம்

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் கட்சியின் எக்ஸ் கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. அமித் ஷாவின் போலி வீடியோ இந்த எக்ஸ் கணக்கில் பகிரப்பட்டு இருந்தது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த மாதம் 23-ம் தேதி ஹைதராபாத்தில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசும்போது, பாஜக ஆட்சிக்கு வந்ததும், சட்டத்திற்கு புறம்பாக தெலங்கானாவில் உள்ள முஸ்லிம் இடஒதுக்கீட்டை நீக்குவோம் என்றும், அதற்கு பதில், எஸ்சி, எஸ்டி, ஓபிசிக்களுக்கு அந்த இட ஒதுக்கீட்டை திரும்ப வழங்குவோம் என்று … Read more

மோடியின் புகைப்படம் இல்லாமல் வெளியிடப்பட்ட தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தல் அறிக்கை… ஆந்திராவில் பாஜக கூட்டணியில் சலசலப்பு…

அமராவதி: ஆந்திரா மாநிலத்தில், தெலுங்குதேசம், நடிகர் பவன் கல்யாண் கட்சிகள் பாஜகவுடன் கூட்டணியில் உள்ள நிலையில்,  தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் பிரதமர்  மோடியின் புகைப்படம் இடம்பெறவில்லை. மோடியின் புகைப்படம் இல்லாமல் ,  சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாண் புகைப்படம் மட்டுமே இடம்பெற்றிருந்த நிலையில், வெளியிடப்பட்ட என்டிஏ கூட்டணி கட்சியின்  தேர்தல் அறிக்கையை பாஜக பிரமுகர்  வாங்க மறுத்து விட்டார். ஆந்திராவில் நடைபெற உள்ள சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல்களில் … Read more

2 எருமை மாடுகள் இருந்தால் காங்கிரஸ் ஆட்சியில் ஒரு எருமையை பறித்துக்கொள்வார்கள்.. பிரதமர் மோடி பேச்சு

காந்திநகர்: உங்களிடம் 2 எருமை மாடுகள் இருந்தால், காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் ஒரு எருமை மாட்டை உங்களிடம் இருந்து பறித்துவிடுவார்கள் என குஜராத்தில் மாடுகள் வளர்க்கும் மக்கள் அதிகம் உள்ள பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார். நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக Source Link

இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த்தின் இளைய மகளான சவுந்தர்யா ரஜினிகாந்த் 'கோச்சடையான், வேலையில்லா பட்டதாரி 2' ஆகிய படங்களை இயக்கியுள்ளார். வெங்கட் பிரபு இயக்கிய 'கோவா' படத்தையும் தயாரித்துள்ளார். கடந்த சில வருடங்களாக சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த சவுந்தர்யா, தற்போது அமேசான் ஓடிடி தளத்திற்காக வெப்தொடர் ஒன்றைத் தயாரித்து வருகிறார். நோவா இயக்கத்தில் 'கேங்ஸ் – குருதிப்புனல்' எனத் தலைப்பிடப்பட்ட அந்தத் தொடரில் அசோக் செல்வன், நாசர், சத்யராஜ், நிமிஷா சஜயன், ரித்திகா சிங், ஈஸ்வரி ராவ் மற்றும் பலர் நடிக்கிறார்கள். … Read more