தீனா ரீ ரிலீஸ்.. ரசிகர்கள் இப்படி செய்யலாமா? அஜித் – விஜய் ரசிகர்கள் மோதல் வெடிக்குமா?

சென்னை: நடிகர் அஜித் குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று தியேட்டரில் தீனா திரைப்படம் ரீ ரிலீஸ் ஆகி உள்ளது. படம் வெளியான தியேட்டரில் ரசிகர்கள் பட்டாசுகளை வெடித்து ஆட்டம் போட்டு வருகின்றனர். மேலும், கில்லி படம் ஓடும் தியேட்டருக்கு சென்ற அஜித் அஜித் என்று கத்தி வருவதால், இரண்டு ரசிகர்களுக்கும் இடையே சண்டை உருவாகும் சூழ்நிலை

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை வெற்றியடையச் செய்வதற்காக அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்துகொள்ள முன்வாருங்கள்

ஐக்கிய மக்கள் சக்தி,ஜே.வி.பி உள்ளிட்ட அரசியல் கட்சிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு. • ஐ.தே.க.யைக் குழிதோண்டிப் புதைக்க சிலர் தயாராக இருந்தாலும், புதைப்பதற்குத் தயாரான பொருளாதாரத்தை மீட்டெடுத்தது ஐக்கிய தேசியக் கட்சிதான். • நாட்டில் ஜனநாயகம் பலப்படுத்தப்பட்டுள்ளதால் காலிமுகத்திடலில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவருக்கு செத்தம் வீதியில் மே தினக் கூட்டத்தை நடத்த முடிந்துள்ளது. • இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை நிறைவேற்றுவோம் – ஐக்கிய தேசியக் கட்சியின் மேதினக் கூட்டத்தில் பெருந்திரளான மக்கள் பங்கேற்பு. சர்வதேச நாணய … Read more

தமிழகத்தில் வாக்காளர் பெயர் நீக்கப்பட்டதாக புகார்; வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு ஆய்வு: தேர்தல் துறை அதிகாரி தகவல்

சென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டதாக அளிக்கப்படும் புகார் தொடர்பாக மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் ஆய்வு செய்யப்படும் என தேர்தல் துறை அதிகாரி தெரிவித்தார். கடந்த ஏப்.19-ம் தேதி தமிழகத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவின்போது, பல்வேறு பகுதிகளில் வாக்காளர்கள் பட்டியலில் பெயர் இல்லை என்று ஒரு சாராரும், நீக்கப்பட்டிருப்பதாக ஒரு சாராரும் தெரிவித்தனர். தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் அக்ரஹாரம் ஒன்றில் வசிக்கும் மக்கள் தங்கள் பெயர்நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து,வாக்குவாதம் செய்தனர். கோவையில் ஒரு … Read more

சல்மான் கான் வீட்டருகே துப்பாக்கிச் சூடு நடத்திய வழக்கில் கைதானவர் தற்கொலை

மும்பை: சல்மான் கான் வீட்டருகே மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர் தற்கொலை எனத் தகவல் வெளியாகியுள்ளது. பிரபல இந்தி நடிகர் சல்மான் கான், மும்பையில் உள்ள பாந்த்ரா பகுதியில் வசித்து வருகிறார். கடந்த மாதம் (ஏப்ரல்) 14ம் தேதி அதிகாலை 4.55 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள், சல்மான் கான் வீட்டின் வெளியே துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பி சென்றனர். இச்சம்பவம் குறித்து மும்பை போலீஸார் தீவிர … Read more

அமேதி, ரேபரேலியில் காந்தி குடும்பமே வேண்டாம்: அடம் பிடுக்கும் ராகுல், காத்திருக்கும் கார்கே

Lok Sabha Elections: பிரியங்கா காந்தி வதேராவோ அல்லது ராகுல் காந்தியோ இந்த தொகுதிகளில் போட்டியிட்டால், அது, மாநிலத்தில் கட்சியில் பிடிப்பை மேம்படுத்தும் முயற்சிக்கு வலு சேர்க்கும் என்று உள்ளூர் தொண்டர்கள் கட்சித் தலைவரிடம் தெரிவித்துள்ளனர். 

பிளே-ஆப்பை தவறவிட்டதா சென்னை அணி? பஞ்சாப்க்கு எதிராக அதிர்ச்சி தோல்வி!

Chennai Super Kings vs Punjab Kings: சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கிடையான இன்றைய போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.  பிளே ஆப் போட்டிக்கு தகுதி பெற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மீதம் உள்ள அனைத்து போட்டிகளில் வெற்றி பெற்றாக வேண்டும் என்பதால் இந்த போட்டியின் மீது எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்தது. மேலும் … Read more

கோடை விடுமுறை: குடும்பத்தோடு லண்டன் சென்றார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…

சென்னை:  கோடை விடுமுறையை யொண்டாட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் லண்டன் புறப்பட்டு சென்றார். ஏற்கனவே முதலமைச்சர் ஸ்டாலின் தனத குடும்பத்தினருடன் கொடைக்கானல் சென்று ஓய்வெடுத்து வரும் நிலையில்,  அமைச்சர் உதயநிதி லண்டனுக்கு பறந்தார். நாடாளுமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் முடிவடைந்தாலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன்க 4ந்தேதி வரை எந்தவொரு அரசு நிகழ்ச்சிகளும் மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. இதனால்,  அமைச்சரும், தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  சென்னையில் இருந்து காலை 9.50 … Read more

மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால்

நடிகர் விஷால் நடித்து சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் 'ரத்னம்'. வழக்கமான டெம்பிளேட்டில் வெளியானதால் இந்த திரைப்படத்திற்கு பெரியளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. அடுத்து 'துப்பறிவாளன் 2'ம் பாகத்தினை விஷால் இயக்கி, நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதத்தில் துவங்குகிறது. துப்பறிவாளன் 2ம் பாகத்தின் படப்பிடிப்பை நிறைவு பெற்ற பிறகு முத்தையா இயக்கத்தில் விஷால் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். கிராமத்து கதைக்களத்தில் இந்தப்படம் தயாராகிறது. ஏற்கனவே முத்தையா இயக்கத்தில் மருது படத்தில் விஷால் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் மணிவர்மனுக்கு கார் பரிசளித்த ஒரு நொடி தயாரிப்பாளர்கள்

மதுரை அழகர் மூவிஸ் மற்றும் வொயிட் லேம்ப் பிக்ஷர்ஸ் தயாரிப்பில், தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான தனஞ்செயன் வெளியிட்ட திரைப்படம் “ஒரு நொடி”. அறிமுக இயக்குநர் மணிவர்மன் இயக்கத்தில் தமன்குமார் நாயகனாக நடித்த ‘ஒரு நொடி’ படம் சமீபத்தில் வெளியாகி விமர்சகளிடமும், ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பு பெற்று திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக இயக்குனர்

பின்தங்கியோர் இடஒதுக்கீடுக்கு சட்ட பாதுகாப்பு தந்தவர் நேரு: பிரதமர் மோடிக்கு செல்வப்பெருந்தகை பதில்

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை நேற்று விடுத்த அறிக்கை: நான் உயிருடன் இருக்கும் வரை மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை அனுமதிக்க மாட்டேன் என்று பிரதமர் நரேந்திர மோடி பேசியிருக்கிறார். 1950-ல் அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வந்ததும், தமிழகத்தில் நீண்டகாலமாக பின்பற்றப்பட்டு வந்த இடஒதுக்கீடு நீதிமன்றங்களால் ரத்து செய்யப்பட்டபோது, அதை எதிர்த்து போராடியவர் பெரியார். இதிலுள்ள நியாயத்தை உணர்ந்த மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர், அப்போதைய பிரதமர் நேருவிடம் வலியுறுத்தி 1951-ம் ஆண்டு ஜூன் 2-ம் தேதி … Read more