"இந்தப் படத்தில் நடிக்கவில்லை என்றால் நான் ஒரு நடிகையே இல்லை!" – `அஞ்சாமை' வாணி போஜன்

நடிகை வாணி போஜன் ‘அஞ்சாமை’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். இத்திரைப்படத்தை அறிமுக இயக்குநர் சுப்புராமன் இயக்கியிருக்கிறார். 

இந்தத் திரைப்படம் வரும் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அதில் பேசிய வாணி போஜன், “இந்தப் படத்தை ரொம்ப விரும்பிப் பண்ணிருக்கேன். உயிரைக் கொடுத்து ஒர்க் பண்ணிருக்கிறோம். இது ஒரு நல்ல படமாக இருக்கும்.‌

‘அஞ்சாமை’

இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக ஏன் நடித்தீர்கள் என்று கேட்டார்கள்… இந்தப் படத்தைப் பண்ணவில்லை என்றால் ஒரு நடிகையாக நான் இருப்பதற்கு அர்த்தமே இல்லை. ஒரு நடிகையாக யாரும் சமூக கருத்து உள்ள படத்தை மிஸ் பண்ண மாட்டாங்க.‌ அதனால் நானும் இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். இந்தப் படத்தை ரொம்ப லவ் பண்ணி பண்ணிருக்கேன்” என்றார். 

‘ரம்பாவா, ரேவதியா, இல்லை வாணியா? யாராக இருக்க விரும்புகிறீர்கள்’ என்ற கேள்விக்கு, “வாணியாகவே இருக்க விரும்புகிறேன்” என்றார்.

‘நீங்கள் நிறைய படம் பண்ணியிருந்தாலும் ஆடிஷன் கூப்பிட்டாங்கன்னு சொன்னீங்க?’ என்ற கேள்விக்கு, “நான் நல்லா நடிப்பேன்னு சொன்னேன். சீரியலில் 5 வருஷம் தினமும் நடித்திருக்கிறேன் என்று பெருமையோடு சொல்வேன். இந்தப் படத்தில் எப்படிப் பொருந்துகிறேன் என்பதற்காக இயக்குநர் என்னை நடித்துக் காட்டச் சொன்னார்” என்று கூறியிருக்கிறார். 

வாணி போஜன்

மேலும், நீட் தேர்வு தொடர்பாக உங்கள் கருத்து என்ன என்ற கேள்விக்கு, “நீட் குறித்துப் பேச வேண்டாம் என்று நினைக்கின்றேன். எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் அதைப் பற்றிப் பேசிய படத்தில் நான் இருப்பதை நினைத்துப் பெருமைப்படுகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.