“விலங்குகளைப் போலதான் நடத்துவார்கள்"- கசப்பான அனுபவம் பகிர்ந்த உர்ஃபி ஜாவேத்

இந்தி சீரியல்களில் நடித்து வந்த உர்ஃபி ஜாவேத் கடந்த 2021-ம் ஆண்டு ஓ.டி.டி தளத்தில் ஒளிபரப்பான பிக் பாஸ் 1-ல் கலந்துகொண்டு பிரபலமானவர்.

பிக் பாஸிலிருந்து ஒரே வாரத்தில் வெளியேற்றப்பட்ட நிலையில், தொடர்ந்து கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். இப்படிக் கவர்ச்சியான உடைகளை அணிவதால் பலரது விமர்சனங்களுக்கும், ட்ரோல்களுக்கும் உர்ஃபி ஜாவேத்  ஆளாகி வருகிறார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் உர்ஃபி ஜாவேத் தொலைக்காட்சி தொடர்களில் நடித்தபோது ஏற்பட்ட கசப்பான அனுபவங்களைப் பகிர்ந்திருக்கிறார்.

உர்ஃபி ஜாவேத்

இதுதொடர்பாக பேசிய அவர், “ நீங்கள் ஒரு பிரபலமான நடிகையாக இல்லை என்றால் தொலைக்காட்சித் தொடர்களில் பணிபுரிவது மிகவும் கடினம். உங்களை நன்றாக நடத்தமாட்டார்கள். விலங்குகளைப் போலதான் நடத்துவார்கள்.  சிலர்  சரியாக சம்பளம் தர மாட்டார்கள். சிலர் ஒப்பந்தம் செய்த சம்பளத்தைத் தராமல் குறைந்த சம்பளத்தைத் தருவார்கள்.

தொலைக்காட்சிகளில் பணிபுரியும்போது மிகவும் கசப்பான அனுபவங்களையே பெற்றிருக்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து பேசிய அவர், “ பிக் பாஸ் செல்வேன் என்று நினைக்கவில்லை. அந்த வாய்ப்பு எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

உர்ஃபி ஜாவேத்

எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்ததற்கு நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். ஏனென்றால் அதன் பிறகுதான் நான் பிரபலமடைந்தேன். ஆனால் தொலைக்காட்சி தொடர் மட்டுமின்றி பிக் பாஸ் மாதிரியான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் இனி பங்கேற்க மாட்டேன்” என்று கூறியிருக்கிறார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.