பண இரட்டிப்பு வாக்குறுதி; கோடிக்கணக்கில் மோசடி – சேலத்தில் சிக்கிய திருப்பூர் நிதி நிறுவன உரிமையாளர்

திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தை அடுத்த காடையூரை சேர்ந்தவர் தீபக் திலக் (45). இவர் கர்நாடக மாநிலம், பெங்களூரை தலைமையிடமாக கொண்டு பி.டி.எம் குரூப் ஆஃப் கம்பெனி என்ற நெட்வொர்க் மார்க்கெட்டிங் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இதன் கிளைகளை திருப்பூர், ஈரோடு, சேலம் என பல இடங்களில் தொடங்கி இருந்தார். இந்த நிறுவனத்தில் ரூ.2 ஆயிரம் முதல் பல லட்சங்கள் வரை முதலீடு செய்தால், குறிப்பிட்ட மாதங்களுக்கு பின், அந்த முதலீட்டுத் தொகை இரட்டிப்பாக வழங்கப்படும் என விளம்பரம் செய்யப்பட்டது.

இதை நம்பி, தமிழகம் முழுவதும் பலர் ரூ.2000-த்தில் தொடங்கி பல லட்சங்கள் வரை இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர். ஆனால், கூறியபடி தீபக் திலக் பணத்தை கொடுக்கவில்லை. தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முதலீட்டாளர்கள் திருப்பூர், சேலம், கோவை என பல இடங்களில் தீபக் திலக் மீது போலீஸில் மோசடிப் புகார் அளித்தனர்.

பணம்

இதனால், தீபக் திலக் தலைமறைவானார். இந்நிலையில், சேலத்தில் தங்கியிருந்த தீபக் திலக்கை கடந்த 28-ம் தேதி பணம் இரட்டிப்பில் ஏமாந்த முதலீட்டாளர்களே பிடித்து சேலம் மாவட்ட போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து, பண மோசடி வழக்கில் தீபக் திலக் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், கோவையைச் சேர்ந்த ஒரே குடும்பத்திடம் பணத்தை இரட்டிப்பாக தருவதாக கூறி ரூ. 23.23 லட்சத்தை ஏமாற்றியதாக திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவில் பதியப்பட்ட வழக்கில் கடந்த 31-ம் தேதி தீபக் திலக் மீண்டும் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார், கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் (டான்பிட் கோர்ட்) நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

போலீஸ் காவல்

மனுவை விசாரித்த நீதிமன்றம் தீபக் திலக்கை மூன்று நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தது. இது குறித்து குற்றப்பிரிவு போலீஸார் கூறுகையில், “நீதிமன்றத்தின் அனுமதியோடு, தீபக் திலக்கை மூன்று நாள்கள் போலீஸ் காவலில் எடுத்துள்ளோம். அவரிடம் விசாரித்தால் மட்டுமே திருப்பூர் மாவட்டத்தில் நடந்த மோசடிகள் குறித்து தெரியவரும். ‘பி.டி.எம்.குரூப் ஆப் கம்பெனி’ நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்து, இதுவரை புகார் கொடுக்காமல் இருப்பவர்கள், திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கலாம்” என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.