`பழைய நண்பர்களை பாஜக சாதாரணமாக எடுத்துகொள்கிறது’ – கேபினட் விவகாரத்தில் சிவசேனா, என்.சி.பி அதிருப்தி

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை இரண்டு நாள்களுக்கு முன்பு பதவியேற்றுள்ளது. அமைச்சரவையில் மகாராஷ்டிராவை சேர்ந்த பா.ஜ.க தலைவர்களுக்கு பா.ஜ.க முக்கியத்துவம் கொடுத்துள்ள போதிலும், அதன் கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் உரிய முக்கியத்துவம் கொடுக்கவில்லை. 7 எம்.பி.க்களை கொண்ட சிவசேனா (ஷிண்டே) தரப்பு ஒரு இணையமைச்சர் பதவி மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இரண்டு பேருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று முதல்வர் ஏக்நாத் ஷிண்டே எதிர்பார்த்தார். இதற்காக இரண்டு பேரை தேர்வு செய்து வைத்திருந்தார். ஆனால் எதிர்பார்த்தது போல் இருவருக்கு கிடைக்காததால் தொடர்ந்து 4வது முறையாக எம்.பியாகி இருக்கும் பிரதாப் ராவ் ஜாதவ் என்பவருக்கு மட்டும் தனிப்பொறுப்புடன் கூடிய இணையமைச்சர் பதவி கொடுக்கப்பட்டு இருக்கிறது. அமைச்சர் பதவி கிடைக்கும் என்று மிகவும் எதிர்பார்ப்புடன் இருந்த ஶ்ரீரங்க் பர்னே அமைச்சர் பதவி கிடைக்காததால் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார்.

ஶ்ரீரங்க் பர்னே

இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், ”அமைச்சர் பதவிக்கு எங்களது கட்சி தகுதியானதுதான். எங்களது கட்சியை விட குறைவான எம்.பி.க்களை கொண்ட கூட்டணி கட்சிகளுக்கெல்லாம் அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் எங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் கொடுக்கப்படவில்லை. வெறும் 2 உறுப்பினர்களை கொண்ட மதசார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த குமாரசாமி, ஐந்து எம்.பி.க்களை கொண்ட சிராக் பஸ்வானுக்கு கேபினட் அந்தஸ்துள்ள அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் 7 இடங்களில் வெற்றி பெற்றுள்ள சிவசேனாவிற்கு இணையமைச்சர் பதவி மட்டும் கொடுத்து அநீதி இழைத்துள்ளனர். அதுவும் சிறிய கட்சிகளெல்லாம் பதவியேற்ற பிறகு 35வது நபராக பதவியேற்கவைத்துள்ளனர்.

பழைய நண்பர்கள் எந்த சூழ்நிலையிலும் கூட்டணியில் இருப்பார்கள் என்று கருதி பா.ஜ.க தனது பழைய நண்பர்களை மிகவும் சாதாரணமாக நடத்துகிறது. மகாராஷ்டிராவில் பா.ஜ.கவை விட நாங்கள் சிறப்பாகத்தான் வெற்றி பெற்றோம். நாங்கள் 15 தொகுதியில் போட்டியிட்டு 7 தொகுதியில் வெற்றி பெற்றோம். ஆனால் பா.ஜ.க 28 தொகுதியில் போட்டியிட்டு வெறும் 9 தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது” என்று தெரிவித்தார்.

அமித் ஷாவுடன் ஷிண்டே மற்றும் அஜித் பவார்

துணை முதல்வர் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியும் அமைச்சர் கொடுக்கப்பட்ட விவகாரத்தில் மிகவும் அதிருப்தியுடன் இருக்கிறது. தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு இணையமைச்சர் பதவி கொடுப்பதாக பா.ஜ.க தரப்பில் சொல்லப்பட்டது.

ஆனால் அதனை தேசியவாத காங்கிரஸ் நிராகரித்துவிட்டது. இது தொடர்பாக அக்கட்சியின் எம்.எல்.ஏ.அன்னா பன்சோடே கூறுகையில், ”எங்களது கட்சி உறுப்பினர் அமைச்சரவையில் இல்லாமல் இருப்பதால் கட்சினர் அதிருப்தியில் இருக்கின்றனர். வர இருக்கும் சட்டமன்ற தேர்தலை கவனத்தில் கொண்டு அமைச்சரவையில் வாய்ப்பு கொடுத்திருக்கவேண்டும்”என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.