வாட்ஸ்அப் எடுத்த அதிரடி நடவடிக்கை! 71 லட்சம் கணக்குகள் முடக்கம்

வாட்ஸ்அப்பை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கவும், தளத்தை நம்பகத்தன்மையுடன் வைத்திருக்கவும், நிறுவனம் ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 30 வரை சுமார் 71 லட்சம் இந்திய கணக்குகளை முழுமையாக தடை செய்துள்ளது. மெட்டாவுக்குச் சொந்தமான வாட்ஸ்அப் தளமானது பயனர்களின் பாதுகாப்பான பயன்பாட்டிற்காக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. நிறுவனம் கிட்டத்தட்ட ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்ற நடவடிக்கை எடுத்து தேவையற்ற கணக்குகளை தடை செய்கிறது.

ஏப்ரல் 2024க்கான வாட்ஸ்அப்பின் இந்திய மாதாந்திர அறிக்கையில் இந்த தகவல் தெரியவந்துள்ளது. அந்த அறிக்கையில், ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 7,182,000 கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளன என்பதைக் காட்டுகிறது. இவற்றில், 1,302,000 கணக்குகள் பயனர்கள் புகாரளிக்கப்படுவதற்கு முன்பே தீவிரமாக தடை செய்யப்பட்டன. புதிதாக கொண்டு வரப்பட்ட மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படி, இத்தகைய கார்ப்ரேட் நிறுவனங்கள் பயனர்களின் புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை கொடுக்க வேண்டும். அத்துடன் இந்த விதிகளின்படி, பயனர் புகார்கள் மற்றும் சட்ட மீறல்களுக்கு பதிலளிக்கும் வகையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஆகியவற்றை விவரிக்கும் அறிக்கைகளை டிஜிட்டல் தளங்கள் வெளியிட வேண்டும். 

சமீபத்திய ஜூன் 2024 அறிக்கை, பயனர் புகார்கள் அடிப்படையில் தவறான நடத்தைக்கு எதிராக WhatsApp இந்த கடுமையான நடவடிக்கையை எடுத்துள்ளது.  ஏப்ரல் 2024 இல், கணக்கு ஆதரவு, தடை மேல்முறையீடுகள், பாதுகாப்புக் கவலைகள் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களில் 10,554 பயனர் அறிக்கைகளை WhatsApp பெற்றது. இந்த அதிக அளவிலான அறிக்கைகள் இருந்தபோதிலும், இந்த புகார்களின் அடிப்படையில் ஆறு கணக்குகள் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டன. அறிக்கையிடப்பட்ட கணக்குகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு முன் WhatsApp பின்பற்றும் கடுமையான நிபந்தனைகளை இது பிரதிபலிக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.