தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: சிபிஐ கூடுதல் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக மதுரை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய சிபிஐ-க்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை தேசிய மனித உரிமைகள் ஆணையம் முடித்து வைத்தது. இதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலரான வழக்கறிஞர் ஹென்றி திபேன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட இறுதி அறிக்கையை மதுரை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஏற்கெனவே நிராகரித்திருந்ததால், தற்போது கூடுதல் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், மதுரை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த கூடுதல் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய, சிபிஐ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 1-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.