புதுக்கோட்டை: `வழக்கு பதிவு செய்யாமல் இருக்க ரூ.2 லட்சம் லஞ்சம்!' – இன்ஸ்பெக்டர் மீது வழக்கு பதிவு

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை காவல் நிலையத்தில் கடந்த 2023-ம் ஆண்டு இன்ஸ்பெக்டராக பனியாற்றியவர் ராஜேந்திரன் (வயது: 55). இவர், தற்போது திருச்சி மாவட்ட்டத்தில் உள்ள தொட்டியம் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். கடந்த வருடம் விராலிமலையில் ஆய்வாளராக அவர் பணியாற்றியபோது, விராலிமலை அருகே உள்ள பொருவாய் கிராமத்தில், செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கத்தை சேர்ந்த ராஜ்குமாருக்கு சொந்தமான நிலத்தை விற்பனை செய்வதில் அவருக்கும், நிலத்தரகர்களுக்கும் இடையில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. அப்போது, விராலிமலை காவல் நிலையத்தில் 2023, மார்ச் 17-ம் தேதி புகார் அளிக்கப்பட்டது. இதில், ராஜ்குமார் மீது வழக்கு பதிவு செய்யாமல் இருக்க இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் அவரிடம் இருந்து ரூ.2 லட்சம் லஞ்சமாக பெற்றதாகச் சொல்லப்படுகிறது.

புதுக்கோட்டை

இந்நிலையில், இது தொடர்பாக கடந்த 2023, அக்டோபர் 4 – ம் தேதி புதுக்கோட்டை மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாருக்கு புகார் வந்துள்ளது. அதனடிப்படையில், புதுக்கோட்டை மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸார், இந்த புகார் குறித்து விசாரணையைத் தொடங்கினர். அவர்களின் விசாரணையின் முடிவில் ராஜேந்திரன் மீதான குற்றச்சாட்டு உறுதியானதால், நேற்று தொட்டியம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மீது போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கு பதிவு செய்யாமல் இருப்பதற்காக ரூ. 2 லட்சம் வரை லஞ்சம் பெற்ற இன்ஸ்பெக்டர் மீது வழக்க பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம், புதுக்கோட்டை, திருச்சி மாவட்ட போலீஸாரிடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.