சென்னை: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து செத்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் இதுவரை 36பேர் பலியான நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மேலும் 100க்கும் மேற்பட்டோர் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில், தமிழ்நாடு அரசை கடுமையாக பலர் சாடி வருகின்றனர். இந்த நிலையில், கள்ளச்சாராயம் […]