சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு 34 ஆக அதிகரித்துள்ள நிலையில், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த நிலையில் முதலர்வர் கள்ளச்சாராய சாவுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்குவாரா என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் 2021ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மாநிலம் முழுவதும் கொலை, கொள்ளை, போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், தமிழ்நாடு அரசும், காவல்துறையும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், […]