தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கை மறுசீரமைத்தல்

தியகம மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டு மைதானத்தின் கனிஸ்ட விளையாட்டரங்கு மற்றும் மெய்வல்லுநர் விளையாட்டுத் திடலின் இரண்டாவது பார்வையாளர் அரங்கின் கூரைகளை அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

குறித்த கட்டுமானப் பணிகளை இலங்கை இராணுவத்தினர் மூலம் மேற்கொள்வதற்காக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இது தொடர்பாக நேற்று (24.06.2024) நடைபெற்ற அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை தீரமானம் பின்வருமாறு:

01. தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கை மறுசீரமைத்தல்

தியகம மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டரங்கின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், நடைமுறைப்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ள துணைக் கருத்திட்டங்களின் கட்டுமான நடவடிக்கைகளை இராணுவத்திடம் வழங்குவதற்காக 2024.01.08 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த விளையாட்டு மைதானத்தின் கனிஸ்ட விளையாட்டரங்கு மற்றும் மெய்வல்லுநர் விளையாட்டுத் திடலின் இரண்டாவது பார்வையாளர் அரங்கின் கூரைகளை அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த கட்டுமானப் பணிகளை இலங்கை இராணுவத்தினர் மூலம் மேற்கொள்வதற்காக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.