கொல்கத்தா மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முழுமையாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். இந்த வருட நீட் தேர்வு தொடங்குவதற்கு முன்பே பீகார் மாநில மையத்தில் வினாத்தாள் கசிந்த சம்பவமும் ஒட்டுமொத்த மாணவர்களையும் பேரதிர்ச்சிக்குள்ளாகியது. மே 5-ம் தேதி நடைபெற்ற இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு எழுதியவர்களில் 1,563 பேருக்கு கருணை மதிப்பெண் என்ற அடிப்படையில் கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டதும் பிரச்னையாக உருவெடுத்தது. […]