`கர்ப்பமாக இருப்பதுபோல் நடிக்க மறுத்தாரா? 'மலர்' சீரியலிலிருந்து ப்ரீத்தி சர்மா வெளியேறியது ஏன்?

சன் டிவியில் பகல் நேரத்தில் ஒளிபரப்பாகி வரும் ‘மலர்’ சீரியலிலிருந்து நடிகை ப்ரீத்தி சர்மா வெளியேறியிருக்கிறார். அவருக்குப் பதிலாக தொடரின் புதிய ஹீரோயினாக விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘மோதலும் காதலும்’ தொடரில் நடித்த அஷ்வதி கமிட் ஆகியிருக்கிறார்.

ப்ரீத்தி ஷர்மா

இது தொடர்பாக அந்த சீரியலுடன் தொடர்புடைய சிலருடன் பேசினோம்.”’கலர்ஸ்’ தமிழ் சேனல்ல ஒளிபரப்பான ‘திருமணம்’ சீரியல் மூலம் தமிழ்த் தொலைக்காட்சி ஏரியாவுக்கு அறிமுகமானவங்கதான் ப்ரீத்தி. பிறகு சன் சன் டிவியில் ‘சித்தி 2’, தொடரில் ‘வெண்பா’ங்கிற கேரக்டர்ல  நடிச்சாங்க. இந்தத் தொடரும் இவங்களுக்கு நல்ல பேரைத் தந்தாலும், யாரும் எதிர்பாராத நேரத்துல தொடர் முடிவடைஞ்சுடுச்சு. தொடர்ந்து சன் டி.வியிலேயே பகல் நேரத்துல ஒளிபரப்பான ‘மலர்’ தொடரில் நடிக்க கமிட் ஆனாங்க. இந்த சீரியல் 400 எபிசோடுகளைக் கடந்து ஒளிபரப்பாகி வர்ற சூழல்ல இப்ப இந்தத் தொடரிலிருந்து வெளியேறியிருக்காங்க”  என்கிறார்கள் இவர்கள்.

ப்ரீத்தி சர்மாவின் இந்த திடீர்  வெளியேற்றத்துக்கான காரணம் குறித்தும் தொடரின் யூனிட் வட்டாரத்தில் விசாரித்தோம்.”அவங்களுக்கு சினிமா பண்ணனும்கிற ஆசை இருந்துட்டே இருந்தது. அதுக்கான முயற்சியையும் தொடர்ந்து பண்ணிட்டுதான் இருந்தாங்க. அதனால சினிமா பண்ணப் போறதாலதான் சீரியல்ல இருந்து விலகுறாங்கனு சிலர் சொல்றாங்க. வேறு சிலரோ வேற ஒரு காரணத்தைச் சொல்றாங்க. அதாவது இந்த சீரியல்ல சில தினங்களுக்கு முன் கர்ப்பமா இருக்கிற மாதிரியான ஒரு காட்சியில நடிக்க வேண்டி வந்ததாகவும் அப்படி நடிக்க அவங்க தயக்கம் காட்டியதாகவும் அதனாலேயே அவங்க தொடரிலிருந்து வெளியேறுகிற சூழல் உருவானதாகவும் ஒரு பேச்சும் போயிட்டிருக்கு” என்கிறார்கள். ப்ரீத்தி சர்மாவுக்குப் பதில் புதிய ஹீரோயினாக ‘மோதலும் காதலும்’ தொடரில் நடித்த அஷ்வதி நடிக்கத் தொடங்கியிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.