சென்னை: வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டு புள்ளி விவரங்களை வெள்ளை அறிக்கையாக அரசு வெளியிட வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து பாமக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். சட்டப்பேரவையில் இருந்து இன்று (சனிக்கிழமை) வெளிநடப்பு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பாமக சட்டப்பேரவை தலைவர் ஜி.கே.மணி கூறியதாவது: சட்டப்பேரவையில் இடஒதுக்கீட்டுக்கான பிரச்சினை குறித்து பேசிய நேரத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் இடஒதுக்கீடு குறித்து பேசிய போது, “பிஹார் மாநிலத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தியதை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதற்கு […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2024/06/PMK-walkout-gk-mani.jpg)