டி20 உலகக் கோப்பையை முத்தமிட்ட இந்தியா… உடனே தோனி போட்ட சர்ப்ரைஸ் பதிவு – ஆஹா!

MS Dhoni Instagram Post On Team India: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 (ICC T20 World Cup 2024) தொடரின் பரபரப்பான இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்றது. அதுமட்டுமின்றி, சுமார் 11 ஆண்டுகளாக நீடித்து வந்த ஐசிசி கோப்பை தாகத்தை ஒருவழியாக இந்திய அணி இம்முறை தீர்த்தது. 2007ஆம் ஆண்டுக்கு பின் டி20 உலகக் கோப்பை தொடரை இந்தியா தற்போது கைப்பற்றியுள்ளது. … Read more

தமிழக பள்ளிக்கல்விதுதுறை இயக்குநராக கண்ணப்பன் நியமனம்

சென்னை தமிழக அரசின் பள்ளிக்கல்விதுதுறை இயக்குநராக தொடக்க்கல்வி இயக்குநர் கண்ணப்பன் நியமனம் செய்யப்பட்டுள்ள்ளார். இன்றுடன் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவொளி பணி ஓய்வு பெறுகிறார். எனவே தொடக்க கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன், பள்ளிக்கல்வித்துறையின் புதிய இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் இதற்கான உத்தரவை, பிறப்பித்துள்ளார். மேலும் அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இயக்குனர் எஸ்.சேதுராமவர்மா, தொடக்கக்கல்வி இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டு, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்தின் இயக்குனர் லதாவுக்கு, அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இயக்குனராக … Read more

விஜய் ஆண்டனி, பிரபாஸ் ரசிகர்களை சீண்டும் ப்ளூ சட்டை மாறன் – எக்ஸ் பக்கத்தில் நடக்கும் கூத்து!

சென்னை: தமிழ் சினிமா வட்டாரத்தில் மிகவும் கவனிக்கப்படும் திரைப்பட விமர்சகர்களில் அதிகம் கவனம் பெறுபவர்களில் ப்ளூ சட்டை மாறனும் ஒருவர். இவர் திரைப்படங்களை விமர்சிப்பது பல திரைப்பிரபலங்களுக்கு கோபத்தை உண்டாக்கியுள்ளது. இதனால் பலர் இவருடன் சமூக வலைதளங்களில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பதிலுக்கு ப்ளூ சட்டை மாறனும் எதாவது வம்பு இழுத்துக் கொண்டே இருப்பார். இது இணையவாசிகளுக்கு ஒருவித

ஆன்லைனில் அறிமுகமான பெண்ணுடன் டேட்டிங் சென்ற இளைஞர்… ரூ.1.2 லட்சம் மோசடி செய்த கும்பல்

புதுடெல்லி, டெல்லியில் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகி வரும் இளைஞர் ஒருவர், ‘டிண்டர்’ செயலி மூலம் வர்ஷா என்ற இளம்பெண் ஒருவருடன் அறிமுகமாகி இருக்கிறார். அந்த பெண் தனது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக கிழக்கு டெல்லியில் உள்ள விகாஸ் மார்க் பகுதியில் அமைந்திருக்கும் பிளாக் மிரர் கபே என்ற உணவகத்திற்கு வருமாறு இளைஞரை அழைத்திருக்கிறார். இதன்படி இருவரும் அந்த உணவகத்திற்கு சென்று கேக் உள்ளிட்ட சிற்றுண்டி உணவுகளை சாப்பிட்டுள்ளனர். அப்போது வர்ஷா, தனது குடும்பத்தினர் ஒருவருக்கு உடல்நலம் சரியில்லை … Read more

மாலத்தீவில் அதிபருக்கு பில்லி சூனியம் வைத்ததாக பெண் மந்திரி கைது

மாலே, அண்டை நாடான மாலத்தீவின் சுற்றுலா துறை மந்திரி பாத்திமா ஷாம்னாஸ் சலீம். இவரது கணவர் ஆதம் ரமீஸ் அதிபர் மாளிகையில் மந்திரிக்கு இணையான பதவி வகித்து வருகிறார். இந்தநிலையில் அதிபர் முகமது மொய்சுவுக்கு பாத்திமா பில்லி சூனியம் வைத்ததாக அவர் மீது புகார் கூறி அவரது வீட்டுக்குச் சென்ற போலீசார் அங்கு தீவிர சோதனைநடத்தினர். அப்போது சந்தேகத்துக்குரிய பல பொருட்கள் அங்கு கண்டறியப்பட்டன. அவற்றை கைப்பற்றிய போலீசார் பாத்திமா ஷாம்னாஸ், ஆதம் ரமீஸ் உள்பட 4 … Read more

நெல்லை மாநகராட்சி தீர்மானத்துக்குப் பின் ஓராண்டாகியும் புதுமைப்பித்தனுக்கு சிலை இல்லை: எழுத்தாளர்கள் வேதனை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சியில் தீர்மானம் போட்டு ஓராண்டாகியும், புதுமை பித்தனுக்கு சிலை அமைக்கப்படாமல் இருப்பது எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் இடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலிக்குப் பெருமை சேர்த்த தமிழ் சிறுகதை இலக்கியத்தின் முன்னோடியான புதுமைப்பித்தனின் 76-வது நினைவு நாள் நாளை (ஜூன் 30) அனுசரிக்கப்படுகிறது. அவருக்கு நினைவு சின்னம் எழுப்பும் வகையில், பாளையங்கோட்டை மேலக்கோட்டை வாசல் பூங்காவில் அவருக்கு மார்பளவுச் சிலை எழுப்ப திருநெல்வேலி மாநகராட்சியில் கடந்த ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இதுவரை அவருக்கு சிலை … Read more

லடாக் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 5 ராணுவ வீரர்கள் பலி – ராஜ்நாத் இரங்கல்

புதுடெல்லி: லடாக்கில் ராணுவ டேங்க் ஆற்றைக் கடக்கும்போது நேரிட்ட விபத்தில் சிக்கி 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் மிகப் பெரிய வருத்தத்தை அளித்திருப்பதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். லடாக் தலைநகர் லே-வில் இருந்து 148 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பகுதி நியோமோ-சுஷுல். இங்குள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு(எல்ஏசி) அருகே ராணுவ வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இன்று (ஜூன் 29) அதிகாலை 1 மணி அளவில் டேங்கர் மூலம் ஆற்றைக் … Read more

அந்த நடிகைகளுக்கு திமிரு அதிகம்.. கண்டுக்கவே மாட்டாங்க.. ரம்பா ஓப்பன் டாக்!

சென்னை: 90களில் கொடிகட்டி பறந்தவர் நடிகை ரம்பா, தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக இருந்த இவர் ரஜினிகாந்த், கமல், விஜய்காந்த், அர்ஜுன், பிரபு, பிரபுதேவா என அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார். தற்போது இவர் அளித்துள்ள பேட்டியில், தனக்கு பிடித்த நடிகை குறித்து கூறியுள்ளார். அந்த பேட்டி தற்போது டிரெண்டாகி வருகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு

கெஜ்ரிவாலுக்கு ஜூலை 12-ந்தேதி வரை நீதிமன்ற காவல்

புதுடெல்லி, டெல்லி அரசின் மதுபான கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. அதிகாரிகள் கெஜ்ரிவாலை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதன்படி கெஜ்ரிவாலை 3 நாட்கள் சி.பி.ஐ. காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி வழங்கியிருந்தது. இதையடுத்து அவரது காவல் இன்றோடு முடிவடைந்த நிலையில், கெஜ்ரிவாலை சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் … Read more

புளியந்தோப்பில் அடுக்குமாடி குடியிருப்பு லிப்டில் இருந்து கீழே விழுந்தவர் உயிரிழப்பு

சென்னை: புளியந்தோப்பில் அடுக்குமாடி குடியிருப்பு லிப்டில் இருந்து கீழே விழுந்தவர் உயிரிழந்தார். சென்னை புளியந்தோப்பு கே.பி பார்க் நகர்புற மேம்பாட்டு வாரியத்துக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பு இ பிளாக்கில் 8 மாடியில் குடும்பத்துடன் வசித்து வந்தவர் கணேசன்(60). இவர் கே.பி.பார்க் அலுவலகம் அருகே டிபன் கடை நடத்தி வந்தார். இந்நிலையில், இன்று மாலை வழக்கம் போல, டிபன் கடை வியாபாரத்தை தொடங்க வீட்டில் இருந்து அவர் புறப்பட்டுள்ளார். 8 மாடியில் இருந்து … Read more