நீட் குறித்த நாடாளுமன்ற விவாதத்தை காங்கிரஸ் விரும்பவில்லை: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்
சண்டிகர்: நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த காங்கிரஸ் விரும்பவில்லை என்றும், குழப்பத்தையும் தடையையும் ஏற்படுத்த வேண்டும் என்பதே அக்கட்சியின் நோக்கம் என்றும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் விமர்சித்துள்ளார். சண்டிகரில் செய்தியாளர்களிடம் பேசிய தர்மேந்திர பிரதான், “நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறி இருக்கிறார். உண்மையில் காங்கிரஸ் விவாதத்தை விரும்பவில்லை. விவாதத்தில் இருந்து … Read more