சென்னை, தஞ்சை, திருச்சியில் 6,746 அடுக்குமாடி குடியிருப்புகள்: பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை: “சென்னை, தஞ்சாவூர், திருச்சியில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டப்பகுதிகளில் 6,746 அடுக்குமாடிக் குடியிருப்புகள், ரூ.1,146 கோடி மதிப்பில், மறு கட்டுமானம் மற்றும் புதிய திட்டப்பகுதிகளில் கட்டுமானமும் மேற்கொள்ளப்படும்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதுகுறித்து அவர் சட்டப்பேரவையில் 110-விதியின் கீழ் வெளியிட்ட அறிக்கை: “மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியால் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், நகர்ப்புறங்களில் வசிக்கும் ஏழைமக்கள் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வாழச் சிறந்த பல திட்டங்களை உருவாக்கி வருகிறது. … Read more