நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சித் துறையில் பெண்களைப பொருளாதார ரீதியாக வலுப்படுத்தல்

நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சித் துறையில் பெண்களை பொருளாதார ரீதியாக வலுப்படுத்தும் நோக்கில் பெண்களை பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்குள்ள தடைகளை நீக்குவதற்காக 02 பில்லியன் ரூபா நிதியை பயன்படுத்தி விசேட கடன் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2024.02.26 அன்று அமைச்சரவைத் தீர்மானத்திற்கமைய, நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சித் துறையை மீண்டும் பலப்படுத்துவதற்காக கடன் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள 20 பில்லியன் ரூபாய்கள் நிதியொதுக்கீட்டில், 02 பில்லியன் ரூபாய்களைப் பயன்படுத்தி பெண்களைப் பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்குள்ள தடைகளை நீக்குவதற்காக இந்த கடன் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இது தொடர்பாக ஜனாதிபதி; அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கே அமைச்சரவையினால் இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக 01.07.2024 அன்று நடைபெற்ற அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:

01. நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சித் துறையில் பெண்களைப் பொருளாதார ரீதியாக வலுப்படுத்தல்

இலங்கையில் பொருளாதார செயற்பாடுகளில் பெண்களின் பங்கேற்பானது பல்வேறு காரணங்களால் ஏனைய பிராந்தியங்கள் மற்றும் ஆசிய நாடுகளை விடவும் குறைந்த மட்டத்தில் காணப்படுகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள இலங்கையின் தொழிற்படை தொடர்பான ஆய்வுக்கமைய, பொருளாதார ரீதியாக முனைப்பாகப் பங்கெடுக்கும் சனத்தொகையில் பெண்களின் சதவீதம் 35மூ ஆக அமைவதுடன், அதன்மூலம் பொருளாதாரச் செயன்முறையில் பங்கேற்பானது ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் குறிப்பிடத்தக்களவு ஏற்றத்தாழ்வைக் காட்டுகின்றது. நிதி தொடர்பான மட்டுப்படுத்தப்பட்ட அறிவு மற்றும் கடன்களைப் பெற்றுக் கொள்வதற்குத் தேவையான சொத்துக்கள் அல்லது வேறு பிணைப் பொறுப்புக்கள் பெண்களிடம் இன்மை, நிதி வளங்களை அணுகுவதற்குள்ள வாய்ப்புக்கள் குறைவடைதல் போன்ற விடயங்கள் இலங்கையில் பெண் தொழில் முயற்சியாளர்கள் எதிர்கொள்கின்ற முக்கிய தடைகளாகக் கண்டறியப்பட்டுள்ளது. அதனால், 2024.02.26 அன்று அமைச்சரவைத் தீர்மானத்திற்கமைய, நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சித் துறையை மீண்டும் பலப்படுத்துவதற்காக கடன் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள 20 பில்லியன் ரூபாய்கள் நிதியொதுக்கீட்டில், 02 பில்லியன் ரூபாய்களைப் பயன்படுத்தி பெண்களைப் பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்குள்ள தடைகளை நீக்குவதற்காக விசேட கடன் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.