மடுமாதாவின் திருச்சொரூபத்திற்கு மணிமுடி சூடிய நூற்றாண்டு விழா : நினைவு தபால் முத்திரை வெளியீடு

மன்னார் மடுமாதாவின் திருச்சொரூபத்திற்கு மணிமுடி சூடிய நூற்றாண்டு விழாவையொட்டி நினைவு தபால் முத்திரை நேற்று (01.07.2024) வெளியீடு செய்யப்பட்டது.

மடு அன்னையின் திரு உருவம் பொறிக்கப்பட்ட முத்திரை இவ்வாறு வெளியீடு செய்யப்பட்டது.

மன்னார் மடு அன்னையின் ஆடி மாதம் திருவிழா இன்று (02) கொண்டாடப்படவுள்ள நிலையில் மடு அன்னை அரசியாக முடி சூட்டப் பட்டதன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மடு அன்னையின் திரு உருவம் பொறிக்கப்பட்ட முத்திரை மடு திருத்தலத்தில் வைத்து வௌியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

மடு திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை எஸ்.அன்ரனி ஞானப்பிரகாசம் அடிகளாரின் ஏற்பாட்டில் இந் நிகழ்வு நடைபெற்றது.

தபால் மா அதிபர் ரூவன் சத்குமாரவினால் விசேட முத்திரை மன்னார் மறைமாவட்ட ஆயர் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையிடம் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.