விம்பிள்டன் டென்னிஸ்: நம்பர் 1 வீரர் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

லண்டன்,

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நேற்று தொடங்கியது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் உலகின் நம்பர் 1 வீரரான ஜானிக் சின்னர் (இத்தாலி), யானிக் ஹான்ப்மேன் (ஜெர்மனி) உடன் மோதினார்.

இதில் முதல் 2 செட்டுகளை கைப்பற்றிய சின்னர் எளிதில் வெற்றி பெறுவார் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் 3-வது செட்டை யானிக் ஹான்ப்மேன் கைப்பற்றி அதிர்ச்சி அளித்தார். இதனையடுத்து 4-வது செட்டை சின்னர் கைப்பற்றி வெற்றி பெற்றார். இந்த ஆட்டத்தில் சின்னர் 6-3, 6-4, 3-6 மற்றும் 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

இவர் தனது 2-வது சுற்று ஆட்டத்தில் சக நாட்டவரான மேட்டியோ பெரெட்டினி உடன் மோத உள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.