Vijayakanth: AI தொழிற்நுட்பத்தில் விஜயகாந்த்?; பிரேமலதா வெளியிட்ட திடீர் அறிக்கை இதுதான்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் தே.மு.தி.க கட்சியின் தலைவராகவும் இருந்த முன்னாள் எதிர்க் கட்சித் தலைவர் விஜயகாந்த் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார்.

இவருடைய மறைவு ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்கள் மற்றும் திரை பிரபலங்கள் மத்தியில் பெரிய இழப்பை ஏற்படுத்தி இருந்தது. இதனிடையே சினிமாவில் பல திரைப்படங்களில் AI தொழில்நுட்பம் மூலமாக விஜயகாந்த் வரும் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக விஜய்யின் G.O.A.T திரைப்படத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் விஜயகாந்த் காட்சிகள் இடம் பெற உள்ளதாகத் தகவல்களும் வெளியானது.

விஜயகாந்த்

இந்நிலையில் முன் அனுமதியின்றி விஜயகாந்த்தைச் செயற்கை நுண்ணறிவு(AI) மூலம் படங்களில் பயன்படுத்தக் கூடாது என்ற பிரேமலதா அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில் , “தமிழ்த் திரை உலகைச் சேர்ந்த அனைவருக்கும் அன்பான வேண்டுகோள். புரட்சிக் கலைஞர் கேப்டனை ஏஐ தொழில்நுட்பத்தின் (AI TECHNOLOGY) மூலம் திரைப்படங்களில் பயன்படுத்த இருப்பதாகத் தொடர்ந்து செய்திகள் வருகிறது.

எனவே இதுபோன்ற செய்திகள் ஆடியோ வெளியீட்டு விழாவில் வருகின்றது. எங்களிடம் முன் அனுமதியில்லாமல் இது மாதிரியான அறிவிப்புகள் வருவதைத் தவிர்த்துக் கொள்ளவேண்டும். எந்த விதத்தில் பயன்படுத்துவதாக இருந்தாலும் முறையாக அனுமதி பெற்ற பின்பே அறிவிப்பை வெளியிட வேண்டும்.

அறிக்கை

ஏஐ தொழில்நுட்பத்தின் (AI TECHNOLOGY) மூலம் திரைப்படங்களில் பயன்படுத்த இருப்பதாக இதுவரை யாரும் எந்த அனுமதியும் பெறவில்லை என்பதை நாங்கள் தெரிவித்துக்கொள்கிறோம். எனவே அனுமதியில்லாமல் பத்திரிகை செய்திகள், ஊடக செய்திகள், ஆடியோ வெளியீட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளில் வெளியிடுவதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.