தெற்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சந்திம சில்வா கடமைகளைப் பொறுப்பேற்றார்

தெற்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சந்திம சில்வா இன்று (2024 ஜூலை 08) கட்டளைத் தலைமையகத்தில் பதவியேற்றார்.

கடற்படையின் மரபுப்படி ரியர் அட்மிரல் சந்திம சில்வாவை தென் கடற்படை கட்டளைக்கு வரவேற்ற பின்னர், குறித்த கடற்படை கட்டளையின் தளபதியாக கடமையாற்றிய ரியர் அட்மிரல் சிந்தக குமாரசிங்க, கட்டளைத் தலைமையகத்தில் புதிய தளபதியிடம் தளபதியின் கடமைகளை கையளித்தார்.

 

மேலும், தென் கடற்படை கட்டளையின் சிரேஷ்ட அதிகாரிகளின் வாழ்த்துக்களுக்குப் பின்னர், ரியர் அட்மிரல் சிந்தக குமாரசிங்க, கடற்படை மரபுப்படி தெற்கு கடற்படை கட்டளையிலிருந்து பிரியாவிடை பெற்றார்.

 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.