Snakes: 35 நாள்களில் 6 முறை கடித்த பாம்புகள்; `திடுக்' சம்பவமும் பாதிக்கப்பட்டவரின்`பகீர்' தகவலும்!

உத்தரப்பிரதேசத்தின் சௌரா கிராமத்தைச் சேர்ந்தவர் விகாஸ் துபே (24). இவர் கடந்த ஜூன் 2-ம் தேதி தூங்கி எழுந்தபோது, அவர் படுக்கையில் இருந்த பாம்பு ஒன்று அவரைக் கடித்தது. உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், சிகிச்சையளிக்கப்பட்டு குணமடைந்தார். அதற்கு அடுத்த ஒரு வாரத்தில் இன்னொரு பாம்பு கடித்திருக்கிறது. அப்போதும் சிகிச்சையளிக்கப்பட்டு அவர் குணமடைந்தார். அதைத் தொடர்ந்து, அவரை இடம் மாற்றினால், பாம்பு கடியிலிருந்து தப்பிக்கலாம் எனக் கருதி, உத்தரப்பிரதேசத்தின் மற்றொரு பகுதியில் இருக்கும் அவரின் அத்தை வீட்டில் விகாஸை தங்க வைத்திருக்கிறார்கள்.

பாம்பு

ஆனால், அங்கும் அவரை ஒரு பாம்பு கடித்திருக்கிறது. அப்போதும் உரிய நேரத்தில் சிகிச்சையளிக்கப்பட்டு குணமடைந்தார். மீண்டும் அவர் வீட்டுக்கு வந்த போது, மற்றொரு பாம்பு கடித்திருக்கிறது. இப்படியாக கடந்த 35 நாள்களில் 6 முறை பாம்பு கடித்திருக்கிறது. உரிய மருத்துவம், குறிப்பிட்ட நேரத்தில் செய்யப்பட்டதால் ஒவ்வொருமுறையும் அவர் உயிர் தப்பியிருக்கிறார்.

இது தொடர்பாக செய்தியாளரிடம் பேசிய அவர், “ஒவ்வொரு முறை பாம்பு கடிக்கும்போதும் முன்னறிவிப்புப் போல ஏதோ ஒன்று தோன்றும். மேலும், என்னை பாம்பு கடித்ததெல்லாம் சனி அல்லது ஞாயிற்றுக்கிழமைகள்தான். எனவே எனக்கு நடக்கும் சம்பவங்களின் பின்னணியில் ஏதோ இருக்கிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறார். இந்தியாவில் பாம்புக்கடியால் ஆண்டுக்கு 50,000 பேர் உயிரிழக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.