ஜனாதிபதியின் கல்வி புலமைப்பரிசில் திட்டம் வவுனியா மாவட்டத்தில்

வவுனியா மாவட்டத்தில் ஜனாதிபதியின் கல்வி புலமைப்பரிசில் திட்ட  நிகழ்வு 2024.07.16 நேற்று மதவுவைத்தகுளம் பொருளாதார மத்திய நிலையத்தில் நடைபெற்றது.

ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கு அமைவாக பொருளாதாரத்தில் பின்தங்கிய ,கல்வி நடவடிக்கைகளில் விசேட திறமையை வெளிப்படுத்தும் மாணவர்களுக்காக குறித்த கல்வி புலமைப்பரிசில் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு  இந்த புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ், நாட்டிலுள்ள அனைத்து 10,126 பாடசாலைகளையும் உள்ளடக்கிய தரம் 1 முதல் தரம் 12 வரை கல்வி கற்கும் 100,000 மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தினூடாக உதவித்தொகை வழங்கப்படவுள்ளது.

இப் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான புலமைப்பரிசில்கள் 2024.07.16 அன்று வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.