இன்று முதல் ஆசிரியர்கள் சட்டப்படி பணியாற்றினாலும், பாடசாலை கல்வி நடவடிக்கைகள் முறையாகவே இடம்பெறும் – கல்வி அமைச்சர்

இன்று (22) முதல் ஆசிரியர் தொழிற்சங்கங்கள் சட்டப்படி பணியாற்றுவதற்கு நடவடிக்கைக்கு எடுத்திருந்தாலும், பாடசாலைகளில் காலை  7.30 முதல் பிற்பகல் 1.30 வரை கல்வி செயற்பாடுகள் இடம்பெறும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்தார்.

இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கல்வி அமைச்சர்..

 

சட்டப்படி வேலை என்பது, பாடசாலைகளில் காலை 7.30 முதல் 1.30  மணி வரை சரியாக கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வதாகும். 

 

சட்டப்படி வேலை செய்வதாயின் அது சிறந்தது. அது தவிர  ஏதும் தேவை காணப்பட்டால் பாடசாலை சமூகம் அதனை மேற்கொள்ளும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.