அரச ஊழியர்களுக்கான விசேட விடுமுறை

கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ளம், மண் சரிவு மற்றும் வீதித் தடைகள் காரணமாக பணிக்கு சமூகமளிக்க முடியாத அரச ஊழியர்களுக்கு விசேட விடுமுறை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கொழும்பு, களுத்துறை, கம்பஹா, காலி மாத்தறை, ஹம்பாந்தோட்டை, புத்தளம், குருநாகல், பொலொண்ணறுவை, கேகாலை மற்றும் இரத்திணபுரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அரச ஊழியர்களுக்கே இந்த விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளது.

அந்த மாவட்டங்களில் வெள்ளம், மண் சரிவு மற்றும் வீதித் தடைகள் காரணமாக அவர்கள் வசிக்கும் இடத்திலிருந்து பணியிடத்திற்குச் செல்லும் பொதுப் போக்குவரத்துச் சேவைகள் துண்டிக்கப்பட்டதால் பணிக்கு சமூகமளிக்க முடியாத அலுவலர்கள் மற்றும் குறித்த பேரழிவால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது இடம்பெயர்வு காரணமாக பணிக்கு சமூகமளிக்க தவறியவர்களுக்கு இந்த விசேட விடுமுறை வழங்கப்படும்.

இது தொடர்பான சுற்றறிக்கையை பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன வெளியிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.