Nayanthara: மம்முட்டி, மாதவன், யஷ் என அசத்தலான பட லைன்அப்களில் நயன்தாரா!

பாலிவுட்டில் ‘ஜவான்’ படத்திற்கு பின், இந்திக்கு செல்லாமல் மீண்டும் தமிழில் கவனம் செலுத்தி வருகிறார் நயன்தாரா.

ஹீரோயின் சென்ட்ரிக்காக சில படங்கள், ஹீரோக்களுடன் சில படங்கள் என இந்தாண்டு அசத்தல் படங்களை கைவசம் வைத்துள்ளார். இப்போது தயாரிப்பாளராகவும் இருப்பதால், நடிப்பிற்கிடையே கூடுதல் பொறுப்புகளுடன் புன்னகைக்கிறார்.

ஸ்டைல் போஸ்..

`லப்பர் பந்து’, `மிஸ்டர் எக்ஸ்’ உள்பட பல படங்களைத் தயாரித்து வரும் பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் டூட் விக்கியின் டைரக்‌ஷனில் ‘மண்ணாங்கட்டி since 1960’ என்ற படத்தில் நடித்து முடித்துவிட்டார். இதன் பெரும்பகுதி படப்பிடிப்பு கொடைக்கானலில் நடந்து முடிந்திருக்கிறது. போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் பரபரக்கின்றன. இதே நிறுவனம் தயாரிப்பில் சர்ஜூன் இயக்கத்தில் ஒரு படமும் கமிட் ஆகியிருக்கிறார். இந்தப் படத்திற்கான கதை விவாதமும் மும்முரமாக நடந்து வருகிறது.

கன்னடத்தில் யஷ்ஷுடன் ‘டாக்ஸிக்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் அவர் யஷ்ஷின் சகோதரியாக நடிக்கிறார் என்ற பேச்சு இருக்கிறது. கீது மோகன்தாஸ் இயக்கி வரும் இப்படத்தில் கியாரா அத்வானி நாயகியாக நடித்து வருகிறார். அடுத்தாண்டு ரிலீஸ் ஆகும் என்கின்றனர்.

யஷ், கீது மோகன்தாஸ்

தயாரிப்பாளர் சஷிகாந்த் இயக்குநராக அறிமுகமாகும் ‘டெஸ்ட்’ படத்தில் மாதவன், சித்தார்த்துடன் இணைந்து நடித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதமே இந்தப் படம் வெளியாகும் என்ற பேச்சு இருந்தது. இந்தப் படத்தையும் முடித்துக் கொடுத்துவிட்டதால், கவின் படத்திற்கு சென்று விட்டார் நயன். லோகேஷ் கனகராஜின் உதவியாளர் விஷ்ணு எடவன் இயக்குநராக அறிமுகமாகும் இந்தப் படத்தில் கவினுக்கு ஜோடியாக நடிக்கிறார். விக்னேஷ் சிவன் தயாரிப்பில் இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனது 81வது படத்தையும் அறிவித்தனர். அதன் படப்பிடிப்பு இன்னமும் தொடங்கப்படாமல் உள்ளது. ஒரு வனவிலங்கிற்கும் (யானை), ஒரு பெண்ணிற்கும் இடையே உள்ள பாசப்பிணைப்புதான் படத்தின் கதை.

மம்மூட்டி

மலையாளத்தில் இரண்டு படங்கள் கைவசம் வைத்துள்ளார். அதில் ஒன்று மம்முட்டியுடன் ஜோடியாக நடிக்கும் படம். தமிழில் நயன்தாராவின் சம்பளம் பல கோடி என்பதை அனைவரும் அறிவார்கள். ஆனாலும் தன் சொந்த தேசமான மலையாளத்தில் அப்படி சம்பளம் கிடைக்காது என்றாலும் கூட, தன்னை தேடி வரும் மலையாளப் படங்களை மறுக்காமல் ஒப்புகொள்வது நயனின் பெருந்தன்மை என்கிறது மல்லுவுட்.

நயன்தாரா

ஹீரோயின் சென்ட்ரிக்காக அடுத்து ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் இரண்டாம் பாகம் தயாராகவிருக்கிறது. இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது. கணவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி நடித்து வரும் ‘லவ் இன்ஸூரன்ஸ் கம்பெனி’யில் லலித்குமாருடன் இணைந்து தயாரித்து வருகிறார். இதன் படப்பிடிப்பும் மும்முரமாக நடந்து வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.