கோவை டு காஷ்மீர்… காதலிப்பதாக அழைத்துச் சென்று சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கோவை இளைஞர் கைது!

கோவை கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்தவர் முகமது அயாஸ். இவரின் தந்தை துணிக்கடை வைத்துள்ளார். அந்தக் கடையை அயாஸ் தான் கவனித்து வந்துள்ளார். இதனிடையே கடந்த 13-ம் தேதி அயாஸ் வீடு திரும்பவில்லை. இதுதொடர்பாக அவரின் தந்தை கரும்புக்கடை காவல்நிலையத்தில் புகாரளித்தார். விசாரணையில் அவர்களின் துணிக்கடையில் பணியாற்றி வரும் 17 வயது சிறுமியும் காணவில்லை என்று தெரியவந்துள்ளது.

காஷ்மீர்

இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோரும் பேரூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளனர். போலீஸ் விசாரணையில் அயாஸின் செல்போன் சிக்னல், ஜம்மு காஷ்மீர் ஶ்ரீநகர் பகுதியில் காட்டியுள்ளது. அயாஸ் அந்த சிறுமியை அழைத்து சென்று ஶ்ரீநகரில் அறை எடுத்து தங்கியது தெரியவந்துள்ளது. இதையடுத்து கோவை போலீஸ் ஶ்ரீநகர் சென்று அயாஸையும், சிறுமியையும் பிடித்து, விமானம் மூலம் கோவை அழைத்து வந்தனர்.

விசாரணையில் முகமது அயாஸ் கடந்த ஓராண்டாக சிறுமியை காதலிப்பதாக கூறி பழகி வந்துள்ளார். மேலும், தனக்கு வீட்டில் திருமணம் செய்து வைப்பதாகவும், வெளியில் சென்று திருமணம் செய்து கொள்ளலாம் என்று சொல்லி சிறுமியை  அழைத்து சென்றுள்ளார்.

முகமது அயாஸ்

சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி அயாஸ் பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து அயாஸ் மீது  போக்சோ, கடத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீஸ், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.