பிலிப்பைன்சில் கடலில் மூழ்கிய எண்ணெய் கப்பலில் இருந்து 16 பேர் மீட்பு

மணிலா,

பிலிப்பைன்சின் படான் மாகாணத்தில் இருந்து இலோய்கா நகருக்கு டெர்ரா நோவா என்ற எண்ணெய் கப்பல் புறப்பட்டது. தலைநகர் மணிலா அருகே சென்றபோது எழும்பிய ராட்சத அலை அந்த கப்பலை தாக்கியது. இதனையடுத்து அங்கு விரைந்த மீட்பு படையினர் சேதமடைந்த அந்த கப்பலை மீட்கும் முயற்சியில் இறங்கினர். அப்போது அந்த கப்பலில் இருந்த 16 பணியாளர்களை அவர்கள் மீட்டனர். மாயமான ஒருவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மேலும் அந்த கப்பலை மீட்டு கரைக்கு கொண்டு வர முயன்றனர். ஆனால் அவர்களது முயற்சி தோல்வியில் முடிந்தது. கடலுக்குள் மூழ்கி வரும் அந்த கப்பலில் இருந்து சுமார் 14 லட்சம் லிட்டர் எண்ணெய் கடலில் கலந்தது.

எனவே அந்த பகுதி எண்ணெய் படலமாக மிதக்கிறது. இதனால் கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே கடலில் மிதக்கும் எண்ணெய் படலத்தை அகற்றும் பணியில் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.