"`இம்சை அரசன் 2' தொடர்பாக வடிவேலு மீது உங்களுக்குக் கோபமா?" – இயக்குநர் சிம்புதேவன் சொன்ன பதில்

`இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சிம்புதேவன்.

அதன் பின்னர் ‘அறை எண் 305இல் கடவுள்’, ‘இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம்’, ‘புலி’ மற்றும் ‘கசட தபற’ உள்ளிட்ட படங்களை இயக்கியிருந்தார். இந்நிலையில் இவரது இயக்கத்தில் தற்போது வெளியாகவுள்ள படம் ‘போட்’. இந்தப் படத்தில் யோகி பாபு கதாநாயகனாக நடித்திருக்கிறார். அவருடன் எம்.எஸ்.பாஸ்கர், கௌரி கிஷன் உள்ளிட்டோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர்.

‘போட்’

வருகிற ஆகஸ்ட் 2-ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் ‘போட்’ படத்திற்கான செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது, “100 வருடத் தமிழ் சினிமாவில் இன்றும் பல பேர் பார்த்து சிரித்துக் கொண்டாடும் படம் ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’. ஆனால் நீங்கள் ‘இம்சை அரசன் 24ஆம் புலிகேசி’ படத்தை எடுக்கவில்லை. ஏன்? உங்களுக்கு இது தொடர்பாக வடிவேலு மீது கோபம் எதாவது இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த இயக்குநர் சிம்புதேவன், “அதெல்லாம் ஒன்றும் இல்லை. ஒரு விஷயத்துக்காக நாம் முயற்சி செய்யலாம். ஆனால் அது நடக்காமல் போவதற்கு பல விஷயங்கள் காரணமாக இருக்கும். அந்தப் படத்தை எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அதை எடுக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பமும். தமிழக மக்களுக்கே அது ஒரு ஏமாற்றம்தான்.

சிம்பு தேவன்

ஆனால் அந்தப் படத்தை எடுப்பேன் என்று நம்புகிறேன். படத்தை எடுக்க முடியவில்லை என்று நான் வருத்தப்படவில்லை. நான் எடுக்க வேண்டியிருந்த எத்தனையோ படங்கள் எடுக்க முடியாமல் போகியிருக்கின்றன” என்று கூறியிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.