Akshay Kumar: "சில தயாரிப்பாளர்கள் எனக்கு பணம் தராமல் ஏமாற்றியுள்ளனர்! அதனால்…" – அக்‌ஷய் குமார்

சில தயாரிப்பாளர்கள் எனக்கு தரவேண்டிய பணத்தை தராமல் ஏமாற்றியிருக்கின்றனர் என்று அக்‌ஷய் குமார் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

பாலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகர் அக்‌ஷய் குமார். சமீபத்தில் சுதா கொங்கரா இயக்கத்தில் ‘சூரரைப் போற்று’ படத்தின் இந்தி ரீமேக்கான ‘சர்ஃபிரா’ படத்தில் நடித்திருந்தார். அப்படம் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. பல படங்களில் நடித்திருக்கும் அவரிடம் சில தயாரிப்பாளர்கள் பணம் தராமல் ஏமாற்றியிருப்பதாகக் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.

அக்‌ஷய் குமார்

“ஒவ்வொரு படத்துக்குப் பின்னாலும் ஏராளமான வியர்வை, ரத்தம், கனவு இருக்கிறது. எந்த ஒரு படம் தோல்வி அடைவதைப் பார்க்கும்போதும் இதயம் வலிக்கிறது. ஆனால் அதிலும் நல்லவற்றைப் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு தோல்வியும் வெற்றியின் மதிப்பை கற்றுத் தருகிறது. அதிர்ஷ்டவசமாக, என்னுடைய திரைப் பயணத்தின் தொடக்கத்திலேயே தோல்வியைச் சமாளிக்க கற்றுக் கொண்டுவிட்டேன்.

வெற்றி, தோல்வி என்பது நமது கைகளில் இல்லை. அடுத்த படத்தில் கவனம் செலுத்துவதும், அதற்காக கடின உழைப்பை செலுத்துவதும்தான் நம் கையில் உள்ளவை. சில தயாரிப்பாளர்கள் எனக்கு தரவேண்டிய பணத்தை தராமல் ஏமாற்றியுள்ளனர்.

அக்‌ஷய் குமார்

இதுவரை எனக்கான மீதிப் பணத்தை அவர்கள் தரவில்லை. என்னை ஏமாற்றும் நபர்களிடம் நான் பேசுவதில்லை. நான் அதன்பிறகு அமைதியாகி விடுவேன்” என்று அக்‌ஷய் குமார் பேசியிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.