வடகொரியாவின் அடுத்த அதிபர் யார்? தென் கொரியா ஊடகங்கள் வெளியிட்ட தகவல்

சியோல்

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு பிறகு அடுத்த அரசியல் வாரிசாக அவரது மகள் ஜு ஏ ( வயது 12) வரலாம் என தென்கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கிழக்காசிய நாடான வட கொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன், 39, 2011ல் அதிபராக பதவி ஏற்றுக் கொண்ட அவர், தொடர்ந்து அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளை நடத்தி அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு மிரட்டல் விடுத்து வருகிறார்.

இந்நிலையில் வடகொரியாவின் அரசியல் சூழல் குறித்து, தென் கொரியாவின் உளவு நிறுவனம், தென்கொரிய ஊடகங்களுக்கு அளித்துள்ள தகவலின் படி,

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அதிபர் பொறுப்பிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலக உள்ளதாகவும், தன் 12 வயது மகள் ஜு ஏ என்பவரை நாட்டின் அடுத்த அதிபராக்கிட திட்டமிட்டு இப்போதே பயிற்சி அளித்து வருகிறார். பொது இடங்களுக்கு தன் மகளையும் உடன் அழைத்துச் செல்கிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னின் அரசியல் வாரிசாக அவரது மகள் வரலாம் என தகவல் வெளியாகி உள்ளது அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.