20 ஆண்டுகளில் 12.30 லட்சம் வழக்குகளை விசாரித்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வு சாதனை!
மதுரை: இன்று 21-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு, கடந்த 20 ஆண்டுகளில் 12.30 லட்சம் வழக்குகளை விசாரித்து சாதனை படைத்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு உலகநேரியில் 24.07.2004-ல் தொடங்கப்பட்டது. மதுரை, திண்டுக்கல், கரூர், திருச்சி, நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தேனி, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த வழக்குகள் மதுரை அமர்வில் விசாரிக் கப்படுகின்றன. நாட்டின் பசுமையான அமர்வு என மதுரை அமர்வு அழைக்கப்படுகிறது. … Read more